Friday, December 7, 2018

சொற்கள் உண்ட செய்தி

சொற்கள் உண்ட செய்தி
மூடி மறைப்பதற்கு அந்தரங்க ரகசியங்களும் இல்லை, ஊரே அறியும்படியான வெளிப்படையான உண்மைகளும் இல்லை. பொய்கள் உண்மையென நம்பப்படுகின்றன. உண்மை தர்க்கங்களால் நம்பும்படியான பொய்யாக உருமாற்றம் அடைகிறது. உண்மை/பொய் என்ற பெயரிடுதலே கூடிய சீக்கிரத்தில் அபத்தமாகிவிடும். எஞ்சியிருப்பது இரண்டு மாத்திரமே – இரகசியம், வதந்தி. பொருள் ஒன்றின் உண்மைத்தன்மையை அல்லது அதன் பொய்மையை அறிய/அடைய இந்த இரண்டு வழி பாதைகள் வழியே பயணிக்க வேண்டியிருக்கிறது. நிச்சயம் சென்று சேரும் இடம் இந்த இரட்டை நிலையங்களாகத்தான் இருக்கும். பொருள் ஒன்று தன்னை ஏதுமற்ற நிலையில் நிறுத்திக் கொள்ள முடியாது. தன் இருத்தலை மெய்ப்பிக்க பெயர் சுட்டிகளான உண்மை, பொய் என்பன அவசியப்படுகின்றன. ஒன்றினை சரி என்று முடிவு செய்து திரும்பிப் பார்க்கும் போதே அது பொய் என வேறொருவரால் மெய்ப்பிக்கப் பட்டுவிடுகிறது. ”சரி, நீ பொய் என்று ஒப்புக்கொள்கிறேன்” என்ற நிலைக்கு வரும் போது மெய்ப்பொருள் மூர்க்கம் கொண்டு சண்டைக்கு வந்துவிடுகிறது. இது புதிர் விளையாட்டு.

Friday, October 19, 2018

The Stately Ruler

The Stately Ruler
Certain objects always seem to be the species of past. They remain not of the time which has been faded by the rhythmic ‘tick’ of the clock. They stay in the remote corner of one’s memory. When silence engulfs the memory, solitude gives life to the past and brings it to the present with an exquisite beauty. People may call it by the names ‘nostalgic’ and ‘memoire’. When an object of the past comes to the present in such a fashion it brings everything of the past and enchants the one who ponders it. If anyone thinks about the ‘ruler’ it must be the matter of reminisce.

Wednesday, August 29, 2018

இடைவெளி

சிறுபத்திரிகை விதை போன்றது அது எப்பேர்ப்பட்ட பாறையையும் உடைத்துக் முளைத்து கொண்டு வெளிவந்துவிடும் என்று கி ரா சொல்லக் கேட்டிருக்கிறேன். இப்போது இடைவெளி இதழின் ஆசிரியர் குழுவில் இருப்பது பெரும் மகிழ்ச்சி. நண்பர் சேது டார்வினுடன்  (#Sethu Darwin) உரையாடலில் விளைந்த ரணாடே கட்டுரையும் இதில் வெளிவந்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி. கட்டுரைகளை வெறும் கதை கவிதைகள் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறோமே இதைத் தவிர்த்து பிரதிக்கு வெளியே இருப்பதைப் பற்றி எழுத நம்மால் இயலாதோ என்ற ஆதங்கம் இருந்ததுண்டு. இக்கட்டுரை அதனை நிவர்த்தி செய்து வைத்தது. இலக்கியத்தின் வழியே ரணாடேவைப் பற்றி எழுதிய இலக்கியம் சாராத எனது முதல் கட்டுரை இது. எழுதி பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆசிரியர் குழுவில் கிடைத்த நண்பர்கள் நமக்கு மற்றுமொரு புதிய ஆரம்பம். நண்பர்கள் அடிக்கடி சந்தித்து உரையாடியதில் இதற்கு முன்பு வரை பயந்து கொண்டு தொடாமல் விட்டு வைத்திருந்த போர்கே கைவசமானார். ஆசிரியர் குழுவின் கூடுகையில் ஒவ்வொரு சந்திப்பும் புதிய புதிய திறப்புகளை உண்டாக்கிக் கொண்டே இருக்கின்றன. என் மீது நம்பிக்கைக் வைத்து ஆசிரியர் குழுவில் என்னை இணைத்துக்கொண்டது  எங்கள் மிட்டாய்காரர் (புத்தகக்காரர்) செந்தில்நாதன் சார்.    

Thursday, August 23, 2018

சந்தி கிழவனின் பாக்கு வெட்டி


சந்தி கிழவனின் பாக்கு வெட்டி
பித்தன் பாக்கு வெட்டியைப் பற்றி கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். கட்டுரை காணாமல் போன பாக்கு வெட்டியைப் பற்றியது. பாக்கு வெட்டி கவிஞரின் உதவிக்காரனா அல்லது உண்மையிலேயே பாக்கு வெட்டி வெறும் இரும்பு கருவியா என தீர்க்கமாக சொல்லாமல் கட்டுரையை சிறிய அளவில் மாபெரும் சூட்சமமாக நீட்டுகிறார் பித்தன். வாசிக்கும் நமக்கு “பாக்கு வெட்டி” என்ற வார்த்தை விளையாட்டு படு ஜாலியாக இருக்கிறது. முதல் முறை வாசிக்கும் போது பாக்கு வெட்டி என்ற கருவியை மனதில் பதிய வைத்துக் கொண்டு வாசித்தால் கட்டுரை முழுவதும் பாக்கு வெட்டியின் பிரஸ்தாபம்  மேலிடுகிறது. வாசிப்பு மேலும் போக போக பாக்குவெட்டி  கருவியில் இருந்து ஒரு நபராக உருவெடுக்கிறது. கட்டுரை முடியும் போது “பாக்கு வெட்டி என்பது ’அது’ அல்ல ’அவன்’ என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இவர் என்ன கட்டுரையில் கவிதை எழுத ஆரம்பித்துவிட்டாரே என சிரிப்புத்தான் வருகிறது. கட்டுரைக்குள் கவிதை.
 ’கழுதகை’ என்ற ஒரு சொல்லை இன்னொரு கட்டுரையில் பயன்படுத்தியிருக்கிறார். இதனை வாசகசாலை நண்பர்கள் வட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தக் கேட்டிருக்கிறேன். இன்னொரு முறை இச்சொல் இலக்கிய வட்டத்தில் பயன்படுத்தப்படும் போது சற்று சுதாரித்துக் கொள்ள வேண்டும்.
பாக்கு வெட்டி என்றதும் எனக்கு எங்கள் ஊர் ’சந்தி கிழவன்’ பாக்குவெட்டித்தான் ஞாபகத்திற்கு வருகிறது. பாக்கை உரலில் போட்டு இடித்து வாயில் போட்டு குதப்பிக் கொண்டிருக்கும் கிழவிகளுக்கு மத்தியில் அதனை நறுக்கி வாயில் போட்டு மென்று தீர்க்க ஒரு இரும்பு கருவி என்றால் அவர் பணக்காரர்தான். 90களுக்கு முன்னர் வரை ஊர்பக்கங்களில் யார் பெரிய பணக்காரன் என கேட்டால் குறைந்தது இருபது எருமை மாடுகளும் பத்து பசு மாடுகளும் வைத்திருப்பவரே பணக்காரர் என்பார்கள். சந்தி கிழவனுக்கு அந்த பணக்காரன் என்ற அந்தஸ்தை நான் அப்போதே அவருடைய மாடுகளை கணக்கிட்டு கொடுத்துவிட்டேன். அதிலும் உயரமான சேலத்து எருதுகளை வைத்திருந்தால் அவரே அவ்வூரின் குறுநில மன்னன். எது எப்படி இருந்தாலும் சந்தி கிழவன் பெரிய செல்வந்தன் என்று நான் சொல்லக் காரணம் அவ்வளவு சொத்துக்களுடன் அவைகளின் கிரீடமாக உச்சியில் அந்த பாக்கு வெட்டி வீற்றிருந்ததினால்தான். கிழவனுக்கு பாக்கு வெட்டி மணிமகுடம்.  
அவர் வீட்டில் எது தொலைந்து போனாலும் அந்த பாக்கு வெட்டி தொலைந்து போகாது. காலையில் உழுதுவிட்டு பன்னிரெண்டு மணிக்கு வீடு சேர்ந்தால் அவர் கை துருதுருவென்று பாக்குவெட்டியையே நாடிசெல்லும். Cutting Player போன்று இரண்டு கால்களை கொண்டது அந்த பாக்கு வெட்டி. தலை உச்சியில் Cutting Player தன் வெட்டும் பணியை வைத்திருக்கும். பாக்கு வெட்டிக்கு தன் கால் இடுக்குகளில் வெட்டும் பணி. பாக்கை அதன் கால் இடுக்குகளில் வைத்து கைக்குள் வைத்து நன்கு ஒரு அழுத்து அழுத்த பாக்கு இரண்டு துண்டாகி விடும். கால்கள் இரண்டில் கத்தி போன்ற வடிவமைப்பு. பாக்கை துண்டாக்கிவிட்டு அயர்ச்சியே இல்லாமல் திரும்பவும் ஓய்வெடுக்க சென்று விடும். சந்தி கிழவன் பன்னிரெண்டு மணிக்கெல்லாம் மாடுகளை மேய்க்க கிளம்பிவிடுவார். எருமை மாடுகளும், பசுமாடுகளும் காலை பத்துமணிக்கே மேய்ச்சலுக்கு கிளம்பிவிடும். எருதுகள் நிலத்தை உழுதுவிட்டு தாமதமாகவே மேய்ச்சலுக்கு கிளம்பும். மாடுகளை மேய்த்து விட்டு நான்கு மணி அளவில் சந்தி கிழவன் வீடு திரும்புவார். இருக்கும் ஒன்று அல்லது இரண்டு மணி நேர இடைவெளியை மாடுகளை கட்ட கயிறுக்காக கற்றாழை நார் பின்னுவதில் செலவிடுவார். ஊர வைத்து அடித்து பின்னிய கற்றாழை நாரைக் கொண்டு மாடுகளுக்கு செய்யப்படும் கயிறுகள் மிக வலுவானவை. எளிதில் அறாது.
வீடு திரும்பும் சந்தி கிழவனுக்காக பாக்கு வெட்டி மீண்டும் ஒருமுறை சேவகம் செய்ய ஆயத்தமாகிவிடும். பாக்குவெட்டி சந்தி கிழவன் வீட்டில் இருந்த ஒரு அலங்கார பொருள். ஊரில் இருக்கும் எவரைவிடவும் சந்தி கிழவனே பெரிய பணக்காரர் என்பதை தன் இருப்பின் மூலம் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டிருந்தது. தேக்காய் நாற் கயிற்றால் பின்னிய அந்த நாற்கட்டில் கூட அவ்வளவு பெரிய அந்தஸ்தை கிழவனாருக்கு கொடுக்கவில்லை. பாக்குவெட்டியின் இருப்பு அவ்வளவு பெரிய மதிப்பு அந்த வீட்டிற்கு. ஊரில் உள்ளவர்கள் விவசாய பாசனத்திற்கு ஆயில் என்ஜின், மின் மோட்டார் என முன்னேறி சென்றாலும் சந்தி கிழவனுக்கு அந்த கமலையை விட்டுக்கொடுக்க மனம் இல்லை. இரும்பாளான மிகப் பெரிய சால் எப்போதும் அவர் வீட்டு முன் இருக்கும். கிணற்றின் ஆழத்தில் இருந்து அவ்வளவு பெரிய சால் தண்ணீரை அள்ளிக் கொண்டு மேலே செல்வதை பார்க்கும் போது அலாதியாக இருக்கும். அந்த பக்கத்தில் மாடு குழியில் முன்னுக்கு இறங்குவதும் பின்னுக்கு ஏறுவதுமாக முக்காள் மணி நேரம் அந்த தண்ணீர் இறைக்கும் ஜாலம் தொடரும். உண்மையைச் சொல்வதானால் சந்தி கிழவனின் அந்தஸ்தை அந்த கமலையைக் கொண்டுதான் வரையறுக்க வேண்டும். என்மட்டில் அந்த சிறிய பாக்கு வெட்டி எப்போதும் ஒரு புராதனப் பொருளாகவே அவர் அருகில் அமர்ந்து கொண்டிருக்கும். வெற்றிலை ஒன்றை எடுத்து காம்பைக் கிள்ளி தொடையில் முன்னும் பின்னுமாக இரு இழு இழுத்து சுத்தம் செய்து கொள்வார். பின்பு அதற்கான இத்தியாதி திருப்பணிகள் தொடரும். வெட்டி வைத்த பாக்கோடும், சுண்ணாம்போடும், அரைகாத தூரத்திற்கு சுண்டி இழுக்கும் பட்டணம் புகையிலையோடும் வாய் சிவக்க சிவக்க அனைத்தும் ஒன்றாக சேர்ந்து அரைபடும்.
கிழவன் என்னிடம் அதிகம் பேசியது கிடையாது. ஒரே ஒரு முறைதான் என்னிடம் பேசியிருக்கிறார். தன் பொறாமை அனைத்தையும் கொட்டித்தீர்த்த விஷத்தின் வார்த்தைகள் அவை. தன்னை மாத்திரம் இருந்த இடத்திலேயே விட்டுவிட்டு முன்னேறிக் கொண்டிருக்கும் ஊராரின் மீது கொப்பளித்திருக்க வேண்டிய பொறாமையை சுடு சொல்லாக ஒரே முறை என் மீது பாய்ச்சினார். அனைத்தையும் அந்த பாக்கு வெட்டிநிமித்தமாக அதுவும் அது கொடுத்த செல்வந்தன் என்ற அந்தஸ்துக்காக சந்தி கிழவனாரின் சுடு சொல்லை பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டேன். அந்த ஒருமுறைதான் அவர் சிறுமைப்பட்டவராக என்முன் காணப்பட்டார். மற்ற எல்லா நேரங்களிலும் ராஜாவாக அமர்ந்து கொண்டு சாவகாசமாக பாக்குகளை வெட்டி வேண்டிய சம்பிரதாயங்களை செய்து நாக்கை சிவக்க வைத்திருந்த சந்தி கிழவன் என்னளவில் பெரிய செல்வந்ததான். அனைத்தும் அந்த பாக்கு வெட்டி தந்த அந்தஸ்த்து. பித்தனின் பாக்குவெட்டியை படிக்கும் போது எனோ மனம் சந்தி கிழவனின் பாக்குவெட்டியிடம் சென்றுவிட்டது.       

Elegy is an Old Women’s Business


Elegy is an Old Women’s Business
Modern life is fleeting phantom. It vanishes from our sight in the blink of our eyes.  It can be further defined with the word “instant”. Instant in a sense that it demands everything at ready hand. It cannot go to raw material and processes it into the fine product for the consumer. What that left to the user is the processed material and with that processed material farther cooking needs to be done for the taste. Theuser of the product needs to over-process it once again. Hence, twice is the process.  
In this context the sense of satisfaction may not be possible. Only when the product is materialized from its rawness to the fine product we could treat it with gladness. Happy are those ages when they used an object for generations. Modern life disregards the value of the material and its utility. With this view in mind one could envisions death as an object in its material status. Marriage, birth, and festivals have their own jubilant mood. Death also has its impact over the gathering not in the sense of tragic loss but in the philosophical contemplation over life. The preacher in the Ecclesiastics says, “it is better to go to a house of mourning Than to go to a house of feasting, Because that is the end of all men; and the living will lay it to his heart” (Ecc. 7:2). Modern life does not have time to spent two days to think about it. When it fleets, it takes away the sense of philosophical contemplation as a phantom.
Within a day gap, a life disappears from our sight. Man who is seemingly lethargic and slow is no more. Even we do not know whether that man ever existed in our surrounding. Jaundice ends his life. In two days’ vacation and return to our home had made it a great surprise that there are no trace of someone who lived in our surrounding. Not even one word exchanged between us. But he was so lively with us in his seemingly lethargic walk in the each and every early morning.
Now fear haunts us that how could the news of the dead stopped to reach us without the messenger of it. When dogs start howling at midnight fear haunts us and gives the sense that the messenger of death is wandering the street. The old phenomenon is routine in its function. I mean dogs' howling before death. But modern people are insensitive towards eeriness of dogs howling. Only his mother carries the age old lamentation of the deceased.
 Still the old woman is mourning even after the rituals. We were passing through the passage but no one is there to inform it. And still she is mourning in continuing her day today routine. For her it will continue whenever the remembrance of her son visits her. But for the modern life and its people even death does not have an effect to shake their indifference. Faces are stony. When I look at them they show their stony face that they are not affected by it.
Still there is the dialogue between me and the old woman. She may not be audible in this dialogue but she does converse with me whenever I look at her. Her mourning is the reply for my visit. It has the resonance in it. It reminds me the house of the dead. But modern life and its people are in the readymade life. Death is also treated like an instant object/occurrence. Those who are accustomed to the old age surely know the howling of dogs bring shudder. When life comes to an end old women sit in circle gathered together and holds their hands tightly for the dirge. Dirge will creates an impact that the life is precious and the recounting of the person’s life in the dirge moves the listener not to think of the ephemeral life but continuation of life. But alone she sings the dirge for the loss of her son.   


Friday, June 29, 2018

Hello Myshkin


Hello Myshkin
How could one keep silent when an extraordinary event takes place in front of him?  Or an eminent person appears in an unexpected moment? He has to report it to at least five or ten of his associates. The thrill will be kept in its vigor for three days. After that the excitement will be extinguished like a dying flame. Only the thin beam of ascending smoke will be the living reminiscence. The story will be narrated like ‘once upon a time I met an eminent person on the seashore of ‘Nellankarai’.
There is a dilemma in meeting the eminent person in the unexpected moment. Morning walk on the seashore especially on Neelankarai beach may rarely give excitement. City life keeps each and every day with an exciting events. In villages festival days are the special occasions and the remaining days are invested in idleness.  When peer groups gather together the main object of their talk or gossip would be on the affairs of their neighbors. When the subject is boring the gossiping tongues will change the recipe to cinema.
“Have you seen that actor in person in Madras?”
“I saw him at close proximity” is the proud answer.
          In my whole life I haven’t seen any celebrity at close proximity in person. I have a doubt that the people on the screen really are living beings on the earth. For me they are the phantoms who appears only on the screen. This was the same case with writers also. We develop an image about the authors in our reading of their stories. When the chance comes to meet them in person the charm will not be there as we have imagined them in our reading. Reality cheats our imaginations. At the same time the great moments in reality are super exceeding to the dream world. They are the epic moments in reality. They are almost like the times of sunrise and sunset. They vanish from our sight within a fraction of moment. Or else time and tide may wait for twenty minutes.
          Most of the time even when the epic moment takes place in our mundane life the indifference in our feeling will not allow us to see it as an epic moment. If our feeling is indifferent even the greatest personality's presence would not thrill us. Today, my morning walk on Neelankarai beach was like this indifferent moment to me. Dullness and its heavy weight of the night sleep still linger in my unrefreshed sense. A walk for one kilometer does not avail to activate the F5 of the computer key board. I have to plunge my foot into the foaming waves. The chillness got its effect up to my head.
The endless ocean is rimmed with the blue sky. My constant gaze is not satisfied with its endless horizon. I have to look at the spaciously rimmed blue ocean until the voice “But I have promises to keep/ And miles to go before I sleep” would come out to alert me to proceed to my home. My attention turned from the ocean into the familiar face which crosses me. I looked at him closely to make sure the person is the eminent one of the cine field.
          “All of his movies begin with his welcome note, “எனதினிய தமிழ் மக்களே”. I was caught into the dilemma whether to say “hello” or to avoid him as stranger. For the people like me who are not craze on cinema, the great directors like him are insignificant. If Myskin walks on this beach surely I would have wished him. It is not for his being a director rather for the name ‘Myshkin’. I would say ’hello’ to Myshkin. Dostoevsky earns this respect for Myshkin and not the director of certain movies. The Idiots are welcomed everywhere.     

Wednesday, June 13, 2018

To Be or Not To Be



To Be or Not To Be
எழுத்தாளர் கட்டியங்காரன் தற்போதைய நவீன தமிழ் இலக்கியத்தில் தவிர்க்கமுடியாத ஆளுமை என உருவாகிவருகிறார். எங்கள் men Friday வாசிப்பு குழுமம் இவரை ஒரு மாபெரும் படைப்பாளியாக உருவாக்கும் பொருட்டு இலக்கிய தீனி போட்டு வளர்த்து வருகிறது. இவர் கதை எழுதுவதைப் பார்த்தால் பித்தனுக்கும், சு ரா வுக்கும் சற்றும் சளைத்தவர் அல்ல என்பது தெரிகிறது. கூட்டங்கள் என வெளியில் உலாவக்கூடாது என்று கண்டிப்பாக சொல்லியிறுக்கிறோம். எந்த இலக்கிய நிகழ்ச்சிக்கும் அவர் போக(வே)க் கூடாது என்பது குழுமத்தின் கட்டுப்பாடு. காலம் கெட்ட கெடப்பில் அரசியல் சார்பு மூளையில் ஒட்டிக்கொள்ளும். அதுவும் கோட்பாடற்ற அரசியல். மானுடதைப் பற்றி 'எழுதுய்யா' என்றால் தத்துவம், கருத்தியல், கோட்பாடு என எதையாவது உளறிக் கொண்டிருப்பார். 
கட்டுப்பாட்டில் ஒரே ஒரு relaxation - எவ்வளவுக்கு வேண்டுமானாலும் வெளிநாடுகளுக்கு சுற்றுளா பயணம் என சுற்றித் திரியலாம். பயணத்திற்கு தம் சொந்த பணத்தில் இருந்துதான் செலவழிக்க வேண்டும். இல்லையென்றாள் நம் நண்பரும் Loyola கல்லூரியின் பேராசிரியருமான ஜெய் தினேஷ் போன்று வட்டிக்கு கடன் வாங்கியாவது அவரை போல ஐரோப்பா, இலங்கை என ஊர் சுற்றளாம். உள்ளூரில் மாத்திரம் எங்கேயும் எழுத்தாளன் என்று சொல்லிக் கொண்டு திரியக் கூடாது.
கட்டியங்காரன் மலேசியா சிங்கப்பூர் என ஊர் சுற்றி விட்டு கடந்த மே இறுதியில் ஊர் திரும்பியிருக்கிறார். பயணப் படியை பன்னிரண்டு மாதத் தவணையில் செலுத்திக்கொள்ளலாமாம்.
ஊர் திரும்பியதும் பயண அனுபவத்தை நண்பர்களிடம் ஓயாமல் ஒரு வாரத்திற்கு கதைகட்டியிருக்கிறார். அவர் வாயை அடைக்க நாடகக்காரர் டேவிட் வெஸ்லி விருந்திற்கு அவரை அழைத்திருக்கிறார். நண்பர் டேவிட் வெஸ்லியின் அம்மா செய்யும் பிரியாணி எங்கள் அனைவருக்கும் அத்தனை பிரியம். அதற்கு கடோர்கஜன்களாகிய நானும் சேது டார்வினும்தான் சரியான ஆட்கள். பாவம் கட்டியங்காரன் பித்தனைப் போலவே அவருக்கும் வயிற்று உபாதை. அளவோடுதான் சாப்பிடுவார். சென்றவாரம் பிரியாணி சாப்பிட டேவிட் வீட்டிற்கு சென்றிருந்தோம். நீண்ட நாட்களுக்கு பிறகு மென் பிரைடே குழுமம் மீண்டும் சந்திக்கிறது. வழக்கம்போல் பிரியாணி பின்பு நல்ல கதை, விவாதம் கடைசியில் தேனீர் கடையில் டீ. இதுவே திருவல்லிக்கேணியாக இருந்தால் முதலில் கதை பின்பு மற்ற அனைத்தும் என தலைகீழாக இருக்கும். எப்படியிருந்தாலும் பிரியாணி, கதை, விவாதம் கடைசியில் டீ/ஜூஸ் இல்லாமல் மென் பிரைடே கூட்டம் இருந்ததில்லை. கூட்டத்திற்கு இவைகள் அனைத்தும் அத்தியாவசியமானவைகள். இந்தமுறை குழுமம் உருப்படியாக  எதையாவது செய்ய வேண்டும் என உத்தேசித்துள்ளது. இனி ஆண்டுக்கு இருமுறை அரையாண்டு ஆங்கில பத்திரிக்கை ஒன்றை கொண்டு வரவேண்டும் என முடிவு செய்துள்ளது. ஏற்கனவே கட்டியங்காரன் அகடவிகடம் பத்திரிக்கையை நடத்திவருகிறார். தமிழில் இப்போதைக்கு அதுதான் தரமான இலக்கிய பத்திரிக்கை. இப்போதெல்லாம் ஒரு கட்டுரையை பத்திரிக்கைக்கு அனுப்பினால் மூன்று வருடங்கள் கழித்துத்தான் வெளிவருகிறது. கதைகளை அனுப்பினால் சொல்லவே வேண்டாம். அதனால்தான் கட்டியங்காரன் சொந்த பத்திரிக்கையை ஆரம்பித்துவிட்டார் போலும். இந்த பெயரையே ஆங்கில பத்திரிக்கைக்கும் வைத்துவிடலாம் என என் காதில் சிசுகிசுத்தார். ஆங்கில பத்திரிக்கைக்கு இந்த பெயர் சூட் ஆதாது என விசயத்தை அப்படியே அமுக்கிவிட்டேன். கோபத்தில் போய்வருகிறேன் என்று ஒருவார்த்தை கூட சொல்லிக்கொள்ளாமல் டீக்கடையில் இருந்து நேராக அம்பத்தூர் பஸ்டாண்டுக்கு சென்று திருவல்லிக்கேணிக்கு போக பஸ் பிடித்து கிளம்பிவிட்டார். இவர்கள் எல்லோரையும் வைத்துக் கொண்டு நான் படும் பாடு எனக்குத்தான் தெரியும். அவர் ஆங்கில பத்திரிக்கைக்கு தன் பத்திரிக்கையின் பேரை சிபாரிசு செய்ததும் அதனை நான் தட்டிக்கழிக்க அவர் கோபப்பட்டதும் நல்லவேளை எனக்கு மட்டும்தான் தெரியும். இது எதுவுமே தெரியாமல் நாடக்காரர் டேவிட் வெஸ்லி பெரும் மகிழ்ச்சியில் இந்த சந்திப்பின் அனுபவத்தை வைத்து ஒரு கதை வேறு எழுதிவிட்டார். அதுவும் தமிழில்.  அவருக்கு கட்டியங்காரன் என்றால் தனிப்பிரியம். கட்டியங்காரன் Hamlet பாத்திரத்தை அவர் நாடகத்தில் சும்மா மிடுக்காக To be or not to beயை  ராஜபாட் ரங்கதுரை போன்று  நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. கதைக்காரருக்கு ஏன் நாடகம் நடிப்பு இதுவெல்லாம். சேது டார்வினுக்கு இது தெரிந்தால் இடம் அதிரும்படி சிரித்து வைத்துவிடுவார். அதற்கு வேறு தனி பஞ்சாயத்து வைக்க வேண்டிவரும். இனி குழுமத்தில் இருந்து நாடகங்களில் கலந்து கொள்ளக் கூடாது என மற்றுமொரு கட்டுப்பாட்டை கட்டியங்காரனுக்கு விதிக்க வேண்டும். நாடக்காரரின் கதை மிக அருமை.
   

Wednesday, May 30, 2018

மராட்டின் மரணம்: கலை பிரச்சாரத்திற்கே

மராட்டின் மரணம்: கலை பிரச்சாரத்திற்கே
மராட்டின் மரணம் என்ற ஓவியம் Slovene சிந்தனையாளர் Slavoj Zizekன் மூலம் அறிமுகமானது. மராட் பிரென்ச்சு புரட்சியின் அங்கத்தினன். கோர்டே என்ற பெண் இவனை சாகும்படி நெஞ்சில் கத்தியால் குத்திவிடுகிறாள். கொலை செய்த பின்பு தப்பி ஓடாமல் அங்கேயே படபடப்பில் நின்று கொண்டிருந்திருக்கிறாள். புரட்சியாளர்கள் அவளை பிடித்துக் கொண்டுபோய் கொன்றுவிடுகின்றனர். இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு மராட்டின் நண்பனான ஓவியர் ழாக்-லூவிஸ் டேவிட் சம்பவத்தை ஓவியமாக தீட்டுகிறார். இந்த ஓவியம் பத்திரிக்கையாளன் மராட்டின் மரணம் என்றழைக்கப்படுகிறது. ஓவியர் டேவிட்  ’ரோபஸ்பியரின் தூரிகை’ என்று செல்லமாக அழைக்கப்பட்டிருக்கிறார். மராட்டின் மரணம் இவரை பெரிதும் பாதித்திருக்கிறது. வெறுமனே தன்னுடைய நண்பனுடைய மரணம் என்பதாக அவர் இம்மரணச்சம்பவத்தை அணுகவில்லை. அது ஒரு புரட்சி சிந்தனையின் மரணமாக அவர் அதனை பார்த்திருக்கிறார். நண்பனுடைய மரணத்தை ஓவியமாக்குவதில் பிரச்சனை ஒன்றும் பெரியதாக இல்லை. அப்படியே சம்பவத்தை பத்திரிக்கை செய்தியை போன்று தத்ரூபமாக வரைந்துவிட்டுப் போய் இருக்கலாம். ழாக்-லூவிஸ் டேவிட் இம்மரணத்தை தன் நண்பன் புரட்சியாளனுடைய மரணத்தின் சம்பவமாக பார்க்காமல் அதனை காலங்கள் கடந்து தொடர்ந்து புரட்சி சிந்தனை சாகடிக்கப்பட்டதினுடைய தருணமாக ஓவியப்படுத்தியிருக்கிறார்.     
பிரென்சு புரட்சியின் அங்கத்தினன் மராட் சரும நோயால் வாதிக்கப்பட்டவன். சருமபிரச்சனையை மற்றும் அதன் வேதனையை சமாளிப்பதற்கு குளியல் தொட்டியில் இருந்தாக வேண்டியிருந்திருக்கிறது. இல்லையென்றால் சரும வேதனை வாதித்துக் கொண்டே இருக்கும். வேகும் உடலுக்கு குளிர் பதம் எப்போதும் அவசியப்பட்டிருக்கிறது. தன்னுடைய பெரும்பான்மையான நேரத்தை குளியல் தொட்டியில் அமர்ந்தவாரே கழித்திருக்கிறான். எழுத்துப் பணிகளைக் கூட தொட்டியில் இருந்தவாரே செய்திருக்கிறான். அப்படி எழுதிக் கொண்டிருந்த போது கோர்டே என்ற பெண் அவன் குளியல் அரையில் நுழந்து அவன் மார்பில் கத்தியை பாச்சியிருக்கிறாள். புரட்சியாளனின் மரணம் பயந்த ஒரு பெண்ணினால் நடத்தப்பட்டிருக்கிறது. அவனுடைய மரணம் பொருளற்ற மரணமாகிவிடுகிறது. நடு ரோட்டில் புரட்சியின் போது அவன் உயிர் போய் இருந்தால் அவன் மரணம் கொண்டாடப்படிருக்கும். குளிக்கும் அறையில் எழுதிக் கொண்டிருக்கும் போது பயந்த பெண் ஒருத்தியினால் கொல்லப்பட்டிருக்கிறான்.
சிந்தனையாளன், உடல் வலுவற்றவன், சருமப்பிரச்சனைக் கொண்டவன் சாதாரணமாக கத்தியை எடுத்து சிறுபையன் கூட கொன்றுவிடலாம். மிகவும் எளிமையான செயல். இதை எழுதியோ பேசியோ சென்சேஷனல் ஆக்கியிருக்க முடியாது. செய்தியை வெளியிட்டிருந்தால் ஒரு நாளைக்குக் கூட செய்தி சூடுபிடித்திருக்காது. எளிதில் ஒரே நாளில் மராட் மக்களால் மறக்கப்பட்டிருப்பான். நிச்சயம் ஓவியம் மாத்திரமே இம்மரணத்தைக் கவித்துவப்படுத்தமுடியும். அதுவும் யதார்த்த கலைவடிவத்தில். ஒரு மாதம் கழித்து ழாக்-லூவிஸ் டேவிட் இதனை காவியப்படுத்துகிறார்.
ஒருவேளை ஒரு நாவலாசிரியன் இதனை முதன்மைப்படுத்தி எழுத முயன்றிந்தால் நிச்சயமாக கதை முழுவதும் கோர்டேவின் பக்கம் திரும்பியிருக்கும். ஏன் இந்த அபலை இவனைக் கொன்றாள் அவளுடைய பின்புலம் என்ன இந்த பெண்ணுக்கு மராட் என்ன தீங்கு செய்தான்? என கேள்விகள் வளர்ந்து கதை நாவலாக வடிவெடுத்திருக்கும்.
புரட்சியாளன் ஏன் கொல்லப்பட்டான் என்பது விவாதப் பொருளாகவே மாறியிருக்காது. இப்போதும் கூட இந்த விவாதம் மராட்டுக்காக அல்ல ரொபஸ்பியரின் தூரிகைக்காக. மராட்டின் மரணம் டேவிட்டின் ஓவியத்தின் மூலமாம புரட்சி சிந்தனையின் மரணமாகப் பார்க்கப்படுகிறது. ஒருவேளை இம்மரணக்காட்சி தினசரியில் வாசிக்கப்பட்டிருக்குமானால் அதில் எந்த வித ஈர்ப்பும் இருந்திருக்காது. பரிதாபமாக இரத்தம் தோய்ந்த தொட்டியில் உடல் மிதந்து கொண்டிருக்கும்.
டேவிட்டின் ஓவியம் அந்த நிஜத்தை முற்றிலும் அழகியல் ரசனைக்கு மாற்றிவிடுகிறது. இந்த ஓவியத்தில் நிஜ சம்பவத்தில் இருந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அவைகள் வெறுமனே மாற்றங்கள் என சொல்லிவிடவும் முடியாது. இந்த ஒரு நிஜத்தின் மையப்புள்ளிக்கு Neo-Classical ஓவியத்தின் கலை நுட்பங்களை பயன்படுத்தியிருக்கிறார். இதுவரையில் செவ்வியல் கலை நுட்பங்கள் கற்பனைவாதத்திற்குத்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இப்போது கற்பனைவாதம் தூக்கியெறியப்பட்டு அனைத்து அழகியல் தொழில் நுட்பங்களையும் அர்ப்பமான யதார்த்தத்தின் மீது பாய்ச்சப்படுகிறது. ழாக்-லூவிஸ் டேவிட்ன் முந்தைய ஓவியங்கள் கிரேக்க, ரோமானிய நாயகர்களை வைத்து வரையப்பட்டவைகள். இப்போது தன் காலத்தின் நாயகனை வரைய இதுவரை தான் ஓவியத்தில் பிரயோகித்திராத செயல்முறையை நிகழ்த்தப் போகிறார். ஒன்று மாத்திரம்தான் இடம் மாற்றம் செய்யப்படுகிறது – கற்பனைவாதத்தின் இடத்தில் இப்போது யதார்த்தவாதம். இதுவரை பிரயோகித்த ஓவியக்கலையின் அனைத்து தொழில் நுட்பங்களையும் யதார்த்தம் என்ற புள்ளிக்கு கொண்டு வருகிறார். அதாவது மராட் என்கிற சமகால புரட்சியாளன்.  
முதலில் மராட்டின் உடல் சரும நோயால் பாதிக்கப்பட்ட உடல். இந்த ஓவியத்தில் அவனது உடல் மிகவும் மென்மையான உடலாக காட்சியளிக்கிறது. கொலை செய்த பெண் ஓவியத்தில் காட்டப்படவில்லை. வழக்கம் போல் வெளிச்சம் அதிகம் உடலின் மீது பாய்ச்சப்பட்டிருக்கிறது. அவன் படுத்திருக்கும் குளியல் தொட்டி குளியளறைக்குள் இருப்பதாகும் ஆனால் ஓவியம் குளியல் அறை என்ற புறக்காட்சியை நீக்கி விடுகிறது. ஜன்னல்கள் ஓவியத்தில் காணப்படவில்லை. மொத்தத்தில் குளியல் தொட்டி இருக்கும் இடம் குளியளறையின் இடம் அல்ல. வெறுமனே குளியல் தொட்டியும், அதனுள் கொலைசெய்யப்பட்ட மராட்டும் அவன் சாய்ந்து படித்திருக்கும் இடத்தில் ‘வெள்ளை துணியும்’ முன்பதாக எழுதுவதற்கு பலகையின் மீது போர்த்தப்பட்ட பச்சை துணியும் அதன் பக்கத்தில் பேனா மையும் காட்சிப்படுத்தப்படுகிறது. இது அப்பட்டமாக ஒரு பத்திரிக்கையாளனுடைய மரணத்தை மாத்திரமே பதிவு செய்யும் ஓவியம்.
யதார்த்தவாதத்தின் தத்ரூபத்தை தாண்டி இலட்சியப்படுத்த வேண்டியவைகளை முதன்மைப் படுத்தும் பிரச்சார ஓவியம் இது. வெள்ளைத் துணியில் இரத்தம் தோய்க்கப்பட்டிருக்கவில்லை. இரத்தம் அதிகம் இருந்தால் அது ஓவியம் ஓவர் ஆக்ட்டிங்காக மாறிவிடும். ஜன்னலும் இல்லை. வெளிச்சம் எங்கிருந்து வருகிறது என்பதும் புதிர். ஒருவேளை அவன் உடளுக்குள் இருந்து ஒளிரும் வெளிச்சமாகக் கூட இருக்கலாம்.  
ஓவியத்தின் வரைபட நுணுக்கங்கள் இப்போதைக்கு விளங்கவில்லை. சரியாக கிடைமட்ட மேல் மட்ட கோடுகள் வைத்து வரையப்பட்டிருக்கிறது. எனினும் சாய்ந்து படுத்திருக்கும் அவனது உடலை பாக்கும் போது கிரேக்க சிந்தனையாளன் சாக்ரட்டீசின் விஷம் அருந்தி சரிந்து கிடக்கும் உடல் போன்று தோன்றுகிறது. ஆகவே மராட் சாக்ரடீஸ் போன்று ஓவியன் ழாக்-லூவிஸ் டேவிட் காலத்து நாயகன். அதுவும் புனிதமாக்கப்பட்ட நாயகன். அவன் உடலில் இருந்து ஒளிரும் வெளிச்சம் பிரென்சு புரட்சியின் புனித நாயகன் என்ற அந்தஸ்தைக் கொடுக்கிறது.
இந்த ஓவியர் ஒரு பிரச்சாரக் கலைஞன். இலட்சியங்களை பிரச்சாரமாக கலையைக் கொண்டு பரப்புகிறான். இவரது புகழ் பெற்ற ஓவியங்கள் என இரண்டை சொல்லலாம். ஒன்று சாக்ரட்டீசின் கடைசித் தருணம், இரண்டாவது குதிரையின் மீது வீர பயணம் மேற்கொள்ளும் நெப்போலியன். தன் காலத்து மகாமனிதனைக் காட்டிலும், கெரேக்கக் காலத்து சிந்தனையாளன் சாக்ரட்டீசைக் காட்டிலும், சமகாலத்து மராட்டை வரைவதுதான் ஓவியர் ழாக்-லூவிஸ் டேவிட் மாபெரும் சவாலாக இருந்திருக்கும். அதில் அவர் பெற்ற வெற்றியே ‘மராட்டின் மரணம்’ என்ற ஓவியத்தை புகழ் பெற்றதாக்கி இருக்கிறது. யதார்த்தத்தில் எளிமைகளின் மீது நடத்தப்படும் கலை பரிசோதனைகள் தான் உயர்ந்த கலையாக மாறுகிறது. கிரேக்க தத்துவ ஞானியும், பிரென்ச்சு எம்பரரும் ஏற்கனவே பெரும் பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறார்கள். அன்றாட வாழ்க்கையில் நடைபெரும் அவளங்களையும், Guernica போன்ற படுகொலைகளையும் காவியப்படுத்துவதுதான் கலைஞனுக்கான சவால். 


Guernica 

Thursday, May 17, 2018

Madam Tussuads அருங்காட்சியகத்தின் மெழுகு உருவப்படிமங்கள்: நெப்போலியன் என்கிற புலிகேசி மன்னர்

53 best Madame Tussaud images on Pinterest | Madame tussauds, Wax ...

Madam Tussuads அருங்காட்சியகத்தின் மெழுகு உருவப்படிமங்கள்: நெப்போலியன் என்கிற புலிகேசி மன்னர்


எந்தவித முன் தகவலும் இன்றி ஓர் இடத்தையோ நபரையோ சென்று பார்க்கும் போது இடமும் நபரும் அடையாளமற்று ஆர்வத்தை தூண்டாமல் இருப்பார்கள். பிரமிப்பும் ஆர்வமும் முன் தகவலின் பேரில் ஏற்படுகின்ற ஒரு மனக் கிளர்ச்சியோ என தோன்றுகிறது. அது வைரமே என்றாலும் பாராட்ட வைரம் என்ற முன் தகவலும் அறிவும் அவசியப்படுகின்றன. அது இல்லாத பட்சத்தில் வைரம் வெறும் கண்ணாடி. பார்வையிடுபவர் முன்பு ஒரு பொருள் ஜடமாக நின்று கொண்டிருக்கும் போது (உயிர் கொண்ட - உயிர் அற்ற) அந்த இரண்டு பேர்கள் மத்தியிலும் எந்த உரையாடலும் நடைபெறுவதில்லை. உயிர் கொண்டவரை கிளர்ச்சியூட்ட ஜடப்பொருள் அசைய வேண்டும். இல்லையென்றால் தன்னை பார்க்க வருபவர் தன்னைப் பற்றின முழு அறிவையும் பெற்றிருக்க வேண்டும். முன்னறிவு ஜடப்பொருளை அசையச் செய்கிறது. இல்லை என்றால் சூன்யத்தை ஜடப்பொருள் தன்னைச் சுற்றி வளையமிட்டுக் கொள்ளும். பல மணி நேரங்கள் முறைத்துப் பார்த்தாலும் அமைதியில் இருவரும் நிலைத்திருப்பர். மிக பிரபலமான மனிதர்களை சந்திக்க சென்றாலும் இதுதான் கதை. அவர் தன்னைப் பற்றி பேசவே மாட்டார். சென்று பார்க்கிற நமக்குத்தான் முன் அறிவு அவசியப்படுகிறது. அது நெப்போலியனே என்றாலும் நான்கு பேர் நல்லவிதமாக அவரைப் பற்றி நாலு வார்த்தைகள் முன்னமே சொல்லியிருக்க வேண்டும்.
சிங்கப்பூரில் உள்ள Madam Tussuads அருங்காட்சியகம் லண்டனில் உள்ளது போன்று கிடையாது. இங்கும் மெழுகினால் செய்யப்பட்ட பிரபலமான உருவங்களை உள்ளே சென்றால் பார்க்க முடியும். முதலில் Madam Tussuads யார் என்றே தெரியாவிட்டால் முழு அருங்காட்சியகமே பொருள் அற்ற ஒன்றுதான். அரக்க பறக்க விக்கி பீடியாவில் பெயரை டைப் செய்தால் தகவல்கள் அள்ளி இறைக்கப்படும். வெறும் தகவல்கள் கூட ஆர்வத்தை தூண்டுவதில்லை. எங்கோ எதோ ஒரு புள்ளியில் ஆர்வம் தூண்டப்பட வேண்டும். அப்புள்ளி தான் முன்னர் சேகரித்த அனைத்து தகவல்களையும் மூளைக்குள் அறிவாக கடத்தும். ஆர்வத்தின் அப்புள்ளி எப்போது கண்டடையப்படும்? Madam Tussuadsன் வாழ்க்கை சரித்திரம் மிகவும் சுவாரசியமானது. இருப்பினும் அச்சுவாரசிய சரித்திரம் அதாவது விக்கி பீடியாவில் சேகரித்த அச்சரித்திர தகவல் பார்ப்பவருக்கு சுவாரசியமாக ஒரு புள்ளியில் மாறவேண்டியிருக்கிறது. ஏற்கனவே சொன்னது போல அது உலகமே அறிந்த நெப்போலியனாகவே இருந்தாலும் அவர் சுவாரசியமாக மாறுகிற ‘புள்ளி’ அதுதான் முக்கியம்.
அருங்காட்சியகத்தில் உள்ளே நுழைந்தால் அனைவருக்குமே சுவாரசியம் கொடுக்கும் இடமாகத்தான் அவ்விடம் அமையும். காரணம் சர்வதேச மற்றும் இந்திய அளவில் உள்ள மிகப்பெரிய பிரபலங்களின் உருவ பொம்மைகள் தத்ரூபமாக நிஜ உருவங்கள் போன்று நின்று கொண்டிருக்கிறார்கள். நம் நாட்டு பிரதமருடைய உருவப்படிமமும் அங்கு உள்ளது. அதுவும் ஒருவகையில் சுவாரசியம்தான். எனினும் ஆச்சரியமூட்டும் உருவ பொமையாக ஒன்றை பார்த்தாக வேண்டும். அனைவரும் நன்கு பரிட்சயமானவர்கள். அவர்களை கண்டு வியப்படைவதற்கு ஒன்றும் கிடையாது. ஒருவேளை நானூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த ஒருவருடைய உருவ பொம்மை அங்கு இருந்தால் முழு அருங்காட்சியகமும் அறிவுக் களஞ்சியம். சம காலத்தின் மனிதர்கள் அறிந்து கொள்வதற்கானவர்கள் கிடையாது. சம காலத்தில் இருந்து இன்னும் இருநூறு ஆண்டுகள் அவர்கள் பயணிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் அறிந்து கொள்வதற்கானவர்கள். அப்படிப்பட்டவர்களின் உருவ பொம்மை தத்ரூபமாக அருங்காட்சியகத்தில் இடம் பெற்றால் அதுதான் அறிதலின் புள்ளி.
பார்ப்பவர்களைச் சுற்றி பிரபலங்கள் செல்ஃபி எடுத்துக் கொள்ள சிரித்த முகத்தோடு நின்று கொண்டிருக்கிறார்கள். இலக்கிய கிறுக்கு ஒன்று இங்கிருந்து சென்றால் பிரபலங்கள் அனைத்தும் அசட்டை செய்யப்படுவார்கள். அப்படிப்பட்ட கிறுக்குகளுக்கு இவ்வருங்காட்சியகத்தில் இரண்டே இரண்டு‘கள்’ மாத்திரம்தான் சுவாரசியம் தரும். அப்படி சுவாரசியம் ஏற்படாவிட்டால் ஆச்சரியப்படாதவர் இலக்கியக் கிறுக்கு என்று தன்னை பற்றி சொல்லிக் கொள்ள முடியாது.
இலக்கிய கிறுக்கு அருங்காட்சியகத்தை ஆர்வமின்றி சுற்றி வந்தால் ஒரு இடத்தில் நிச்சயம் கவனம் திசைத்திருப்பப்படும். ஐந்து புத்தகங்கள் இவ்வருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கின்றன. அனைத்தும் cloth binding. ஒன்று மருத்துவம் சம்பந்தமான புத்தகம். மற்ற மூன்றும் என்னவென்றே தெரியவில்லை. ஐந்தாவதாக ஆர்வத்தை தூண்டும் வண்ணமாக ஒரு இலக்கிய பிரதி காட்சிக்கு வைக்கப்பட்டிருகிறது – The Picture of Dorian Gray. இக்கதை இதுவரை வாசிக்கப்படாமல் விடப்படிருந்தாள் நிச்சயமாக இந்த இடத்தில் புத்தகத்தை பார்க்கும் போது “அடடா வாசிக்காமல் விட்டுவிட்டோமே” என்று சென்னை திரும்பியதும் கதையை வாசிக்க ஆரம்பித்துவிடுவார். இது முதலாவது சுவாரசியம். அதுவரையில் டோரியன் கிரே தகவல் மட்டுமே. இன்மேல் கிரே வாசிப்பதற்கான நல்ல சுவாரசியமான கதை.
யாருடைய பேரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கிறதோ அவருடைய உருவ பொம்மை இல்லாவிட்டால் அவ்விடத்திற்கு பொருளே கிடையாது. நிச்சயமாக ஏதோ ஒரு ஒரு மூலையில் அந்த அம்மா நின்று கொண்டிருப்பார். அவர் கண்ணில் பட்டுவிட்டால் பார்ப்பவருக்கு கிலி. ஒரு பெண்மனி மெல்லியதொரு கைக்குட்டையில் இரண்டு விரல்களால் (கட்டை விரல் நடு விரல்) எதையோ பிடித்துக் கொண்டிருக்கிறார். மேலே இருக்கிற பலகை இவர்தான் Madam Tussuads என்று சொல்கிறது. அழகிய நீண்ட மூக்கு. மற்ற உருவ பொம்மைகளைக் காட்டிலும் இவர் அறிந்து கொள்வதற்கானவர்தான். சற்று அருகில் சென்று பார்த்தால் கைக்குட்டையில் வெட்டப்பட்ட தலை இருக்கிறது. கையில் வெட்டப்பட்ட தலையோடு மெழுகு பொம்மை தத்ரூபத்தில் நின்றால் அது வெறும் பொம்மை என்பதை மனம் ஏற்க மறுக்கும். அவரைப் பற்றின தகவல்கள் பெரிய பலகையில் வரிசையாக எழுதப்பட்டிருக்கின்றன.
Tussuadsன் அம்மா மெழுகு உருப்படிமங்கள் (wax modeling) செய்வதில் நிபுணர். அக்கலையை தன் மகளுக்கும் கற்று கொடுத்திருக்கிறார். பிரென்சு புரட்சியின் காலத்தில் Tussuads சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். மூன்று மாதங்களில் தலை வெட்டப்படும். செல்வாக்கு பெற்றவர்களின் தலையீட்டால் விடுதலை செய்யப்படிருக்கிறார்.
ரூசோ போன்றவர்களுக்கு உருவப்படிமங்கள் செய்தார் என எழுதப்பட்டிருப்பது தகவல். அது சுவாரசியத்தை அளிக்காது. பலகையின் கடைசிக் குறிப்பு போரும் வாழ்வும் படித்திருந்தால் நிச்சயம் ”களுக்” என்று சிரிப்பை உண்டாக்கிவிடும். அதுவும் போரும் வாழ்வும் நாவலைப் படித்தவர்களுக்கு மாத்திரமே சிரிப்பு வரும் மற்றவர்களுக்கு அது வெறும் தகவல் அல்லது அறிவு. எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். நிச்சயமாக போரும் வாழ்வும் படித்தவர்களுக்கு சிரிப்பு வரும். கேரன்ட்டி.
போரும் வாழ்வும் நாவலில் நெப்போலியனை டால்ஸ்டாய் ’வச்சி செய்திருக்கிறார்’. நாவலில் நெப்போலியன் ஒரு கோமாளி. எங்கு யாரைப் பார்த்தாலும் வீர வசனம். Tussuads நெப்போலியனுக்கும் உருவப்படிமத்தை செய்திருக்கிறார். முகத்திற்கு படிமத்தை எடுக்கும் போது விளையாட்டாக “மிரண்டு கத்திவிடாதீர்கள்” என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். சிரித்துவிட்டு போக வேண்டியதுதானே? அங்கேயும் வீர வசனம். “நூறு போர் வீரர்களை கொண்டு என்னை துப்பாக்கி முனையிலா மிரட்டப்போகிறாய் நான் பயப்படுவதற்கு” என்று பதில் சொல்லியிருக்கிறார் நம் புலிகேசி மன்னர். போரும் வாழ்வும் நாவலை படித்திருந்தால் நிச்சயம் நெப்போலியனின் இந்த பதிலை படிக்கும் போது சிரிப்பு வரும். வர வேண்டும்.                  


Thursday, May 10, 2018

மலேசியா சிங்கப்பூர் பயணம்: வீடு திரும்புதல்


மலேசியா சிங்கப்பூர் பயணம்: வீடு திரும்புதல்

பெட்ரிசியன் கல்லூரி பேராசிரியர்களின் மலேசிய சிங்கப்பூர் சுற்றுலா பயணம் இன்றோடு (7/5/2018) முடிவடைகிறது. வீடு திரும்புகின்றோம். எனக்கு சிங்கப்பூரை விட்டு போகிறோமே என்ற பிரிவின் வருத்தமும் இல்லை சென்னைக்கு போகிறோம் என்ற மகிழ்ச்சியும் இல்லை. ’யாதும் ஊரே யாவரும் கேளீர்’ எனும் மனநிலை இப்போது.
 குச்சி மிட்டயும் குருவி ரொட்டியும் வாங்கி தருவதாக சொல்லி சீனியர் தர்மாவையும், உடன் பேராசிரியர் ஜஸ்டிசையும் சரிகட்டிவிட்டு ஜனனல் ஓர இருக்கையை கையகப்படுத்திவிட்டேன். சென்னைக்கு திரும்பும் Scoot விமான ஊர்தி அளவில் பெரியது. மலேசியா செல்லும் போது பயணித்த ஊர்தி மிகச்சிறிய அளவில் இருந்தது. ஓடிப்போய் ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து கொண்டேன். விமான அலுவளர் ஒருவர் வந்து டிக்கட்டை வாங்கி சரிபார்த்து ஜன்னலில் இருந்து மூன்றாவது இருக்கைக்கு மாற சொன்னார். அவர் செய்தது பஸ்ஸில் ஐந்து வயது பையன் ஜன்னல் ஓர இருக்கைக்கு ஆசைப்பட்டு கண்டக்டரிடம் குட்டுவாங்கிய கதையாகிவிட்டது. ஏன் என் இருக்கையை மாத்திரம் பரிசோதிக்க வேண்டும். நிராசையில் மூன்றாவது இருக்கைக்கு வந்தமர்ந்தேன். மேலே பறக்கும் போது நிலத்தின் காட்சி தென்பட வில்லை. ஐந்து வயது பையனின் ஏமாற்றம் அது. ஆனால் வீடு திரும்பும் போது அப்படி இல்லை.
லைபரரியன் மேடம் இடத்தை மாற்றிக் கொண்டார்கள். அந்த இடத்திற்கு எனது எம் ஏ சீனியர் தர்மா வந்து உட்கார்ந்தார். இப்போது உடன் பேராசிரியர். என்னுடையது நடு இருக்கை. பாவம் சின்னப் பையன் என்று அந்த நடு சீட்டை அபகரிக்க மாட்டார். ஜன்னல் ஓரமாக இன்னொரு பேராசிரியையின் மாகன். சீட்டுக்கு போட்டி போடவும் முடியாது. கெஞ்சிக் கேட்கவும் முடியாது. பரவாயில்லை. ஓரளவிற்கு நிலத்தின் காட்சி தென்படுகிறது. கொஞ்சம் எட்டிப் பார்த்தால் இன்னும் தெளிவாகத் தெரியும். முழுமை கிடைக்காதே!
சிறிது நேரம் கழித்து ஜன்னல் ஓர பையனின் அம்மா அதாவது எங்கள் உடன் பேராசிரியை அவனை தன்னிடம் வந்து உட்காருமாறு அழைத்துக் கொண்டார். இப்போது ஜன்னல் இருக்கைக்கு ஜஸ்டிஸ் வரப் போகிறார். பையன் இடத்தை காலி செய்த உடனேயே நகர்ந்து ஜன்னல் ஓரம் சென்று விட்டேன். அசடு வழிய ஜஸ்டிசை பார்த்தேன். பரவாயில்லை உட்காருங்க என பெருந்தன்மையோடு நடு இருக்கையில் அமர்ந்து கொண்டார். இதற்கெல்லாம் பெரிய மனசு வேண்டும். “பார்த்து தம்பி ஜன்னல் வழியா வெளிய குதிச்சிட போற” சீனியர் தர்மா.
முழுமையான கட்சி இப்போது கிட்டிவிட்டது. விமானம் பறக்கும் போது ஒன்றை மிஸ் பன்னாமல் பார்க்க வேண்டும். பஞ்சு பொதிகளாக பறக்கும் மேகங்கள். நல்லிரவில் அது எப்படி சாத்தியமாகும்.  கீழே இருந்து சிங்கப்பூரின் மின் விளக்குகள் போதுமான வெளிச்சத்தை வான்நோக்கி ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. அந்த இருட்டிலும் ஊர்திக்கு கீழே பறக்கும் அந்த பஞ்சு மேகங்களை பார்க்கிறேன். இதையெல்லாம் ’அது அப்படி இருந்தது, இது இப்படி இருந்தது என இங்கு வர்ணிக்க முடியாது’. மேகம் ஊர்திக்கு கீழே பறந்து சென்று கொண்டிருக்கிறது. அவ்வளவுதான். மேகங்கள்? மேகம்? நமக்கேன் இந்த இலக்கண சண்டை.
சிங்கார நகரம் இப்போது கண்முன் முழுமையில் காட்சியாக்கப்படுகிறது. மனதை கொள்ளை கொள்ளும் காட்சி அது. சீரியல் விளக்குகளால் அலக்கரிக்கப்பட்ட திருவிழாக் கோலம் அது. இதுவே இப்படி என்றால் பிரான்ஸ் எப்படி இருக்கும். இப்போது ஜஸ்டிசைப் பார்க்கும் போது ”மெட்ராஸ் போனதும் ஒனக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கிதாறேன்” என்ற நன்றியுணர்ச்சி. தூக்கம் மெல்ல கண் இமைகளை தழுவ ஆரம்பித்தது (பொன்னியின் செல்வன் படித்த பாதிப்பு வேறொன்றுமில்லை).
உறக்கம் தெளிந்தவுடன் கடிகாரத்தைப் பார்க்கும் போது மணி சரியாக இரண்டு. கடலில் இருந்து நிலம் கிட்ட கிட்ட அருகே வந்து கொண்டிருக்கிறது. சென்னையை நோக்கி விமானம் கீழே இறங்குகிறது. நிலப்பரப்பு கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து கொண்டே செல்கிறது. மௌன்ட் ரோடு, ஜி எஸ் டி ரோடு, மெட்ரோ ரயில் பாதை என எல்லாம் தெளிவாக பரிட்சயப்பட்ட இடங்கள் புதுமையாக தெரிய ஆரம்பிக்கின்றன. ஆறு நாள் சுற்றுலா பயணம் பேராசிரியர்கள் அனைவரையும் மிகவும் நெருக்கமானவர்களாக மாற்றிவிட்டது. இனி கல்லூரியில் ஒருவரையொருவர் சந்திக்கும் போது அந்நியத்தன்மை இருக்காது என நினைக்கிறேன். இனி வரும் காலங்களில் அந்த ஆறு நாட்கள் நட்பின் பரிட்சயத்தை நினைவூட்டிக் கொண்டே இருக்கும். பெரிய மனது பன்னி ஜன்னல் ஓர இருக்கையை கொடுத்த அந்த இரண்டு பேராசிரியர்கள் இனி நமக்கு மிகவும் முக்கியமானவர்கள். ஒருவேளை அந்த சிறு பையன் மாத்திரம் அங்கு இருந்திருந்தால் என் ஆசைகள் எல்லாம் நிராசையாகிவிட்டுருக்கும். விமானத்தில் பயணம் செய்து ஜன்னல் ஓரம் கிடைக்காவிட்டால் அதில் பயணம் செய்தால் என்ன செய்யாவிட்டால் என்ன? இரண்டும் ஒன்றுதான். சிறு வயது என்பது உடலின் பருவநிலை மாற்றம் இல்லை. அது சிறிது நேரத்திற்கான மன நிலை. அனைவரும் அந்த நிலைக்கு சென்று கொஞ்ச நேரமாவது இலயித்திருக்க வேண்டும். விமானத்தை விட்டு வெளியேறும் போது ஜன்னல் ஓரத்திலேயே அந்த மனநிலையை கழற்றிவிட வேண்டும். சரி சரி அதிகம் உபதேசத்திற்குள் கட்டுரை பயணிக்கிறது. இத்தோடு இப்பதிவை முடித்துக் கொள்வோம்.   

Tuesday, May 8, 2018

சிங்கப்பூர் பயணக் குறிப்பு (2) (Gardens by the Bay (Flower Dome + Cloud Forest): தேனீக்கு தெரியுமா மலரின் வாசனை



சிங்கப்பூர் பயணக் குறிப்பு (Gardens by the Bay (Flower Dome + Cloud Forest): தேனீக்கு தெரியுமா மலரின் வாசனை
தூரத்தில் இருந்து பார்க்கும் போது கண்ணாடி மூடியால் மூடப்பட்ட இரண்டு மாபெரும் குமிழ்கள் தென்படுகின்றன. அதற்கு அந்தப்பக்கம் உயர்ந்த கட்டிடத்தின் மீது கப்பலை நிறுத்திவைக்கப்பட்ட வடிவத்தில்  7 நட்சத்திர ஓட்டல். இந்தப்பக்கம் இராட்சத சக்கரம். இவ்விரண்டையும் பார்த்துக் கொண்டே கண்ணாடி மூடிக்குள் செல்கிறோம். வாயிலில் நுழையும் போதே ஆயிரம் பூக்களின் வாசம் ஒன்று சேர்த்து கிரங்கடிக்கிறது. எது எந்த மலரின் வாசனை என்று ஊகித்தறியமுடியாத கலவை அது. நம் நுரையீரல்கள் அது போன்றதொரு வாசத்தை இதுவரை சுவாசித்திருக்காது என நினைக்கிறேன். ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கண்ணுக்கும் நுரையீரலுக்கும், மனதுக்கும் உகந்த காட்சி, வாசனை, இதம். எத்தனைவிதமான மலர்கள்! பார்த்து இனம் கண்டுபிடிப்பதற்கே மாதங்கள் செலவழியும்.    
பேராசிரியர் ஒருவர் ”அருள் சார் இப்ப உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது?” என்று கேட்டார். சற்று நேரம் முழித்தேன். Words Worthன் Daffodils நினைவுக்கு வரவில்லையா என கேட்டார். ”இல்லை” என்றேன். அந்த ரொமான்டிக் கவிஞன் என்னை ஒருமுறை கூட படைப்பின் இப்படிப்பட்ட அழகினிடத்திற்கு அழைத்து சென்றதே கிடையாது. என் பதில் ”இல்லை சார், சாலமோன் சொன்ன காட்டுப்புஷ்பம் (lilies) தான் நினைவிற்கு வருகிறது” என்றேன். இன்றளவும் ஏனோ ரொமான்டிக் கவிஞர்கள் மீது இனம் புரியாத அலர்ஜி. பேராசிரியர் ரெஜானி சொல்வார், பதினெட்டு வயதுக்கு மேல் ஒருவன் ரொமான்டிக் கவிதைகளை நேசித்தால் அவனிடம் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். அதுவே பதினெட்டு வயது வாலிபன் ரொமாண்டிக் கவிதைகளை வாசிக்கவில்லை என்றாலும் அவனிடம் பிரச்சனை இருக்கிறது என்று. இனி நான் ரொமாண்டிக் கவிஞர்களிடம் போக முடியாது. பாடம் நடத்துவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
எனினும் இப்பூக்களின் படையெடுப்பை பார்க்கும் போது இறைமகன் சொன்ன வாக்கியம் நினைவுக்கு வருகிறது: ”காட்டுப்புஷ்பங்களை கவனித்து பாருங்கள், சாலமோன் முதலாய் தன் சர்வ மகிமையில் அவ்விதமாய் உடுத்தவில்லை”. கடவுள் உடுத்துவிக்கும் ஒரு மலரின் அழகுக்கு முன்னால் சாலமோன் ராஜாவின் ஞானம் ஒன்றும் கிடையாது போலும்.
தேன் சேகரிக்கும் தேனீக்களைப் போன்று நாங்கள் அனைவரும் அந்த கண்ணாடி மூடிக்குள் பயணித்தோம் என சொல்லலாம் என நினைக்கிறேன். மலர்களையும் குருவிகளையும் பார்க்கும் போது நாமும் கூட அந்த ரொமாண்டிக் கவிஞர்களாக மாறிவிடுகிறோம். படைப்பாளிகளையும் நம்மூர் தர்க்கவாதிகளையும் இதை நினைத்துக் கொண்டே எதையாவது எழுதலாமா என நினைக்கும் போது சற்று கூச்சமாக இருக்கிறது.  தர்க்கவாதிகள் நுண்ணுணர்வை கேலி செய்பவர்கள். அதற்கு நுண்ணுணர்வுவாதிகள் பொறுப்பா அல்லது தர்க்கவாதிகளின் கோளாரா என நிச்சயமாக சொல்ல முடியாது. இருவருக்கும் ஏற்றார் போன்று நடுநிலைமை காப்பது நமக்கு நலம்.
இதனை அதிக நீட்டலும் அல்லாமல் குறுக்கலும் அல்லாமல் பாபிலோனின் தொங்கும் தோட்டம் என வர்ணிப்பை முடித்துக் கொள்வதுதான் சரி. ஆறு மாடிக்கு லிஃப்ட்டை பயன்படுத்தி தொங்கும் மலர் மாளிகையின் உச்சிக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து இறங்கு பாதையில் அனைத்து மலர்களையும் இரசித்த வண்ணமாக கீழே இறங்கி வர வேண்டும். உச்சத்தில் இருந்து கீழே நோக்கினால் பீதி பற்றிக் கொள்கிறது. அவ்வளவு உயரத்தில் இருந்து ஆழத்தை நான் கண்டதே கிடையாது. தளம் ஜன்னல் போன்றதொரு இறங்கு பாதையைக் கொண்டது. நம் காலுக்கு கீழே பார்த்தால் தலை சுற்ற ஆரம்பிக்கிறது. 90 டிகிரியில் கிடைமட்டமாக பார்க்கும் போதும், உச்சத்தில் 365 டிகிரியில் ஏறெடுத்து பார்க்கும் போதுதான் பரவசம். 0 டிகிரியில் அதனையே கீழ் நோக்கி பார்த்தால் பயம் பற்றிக் கொள்கிறது. வாழ்க்கையை அப்படிப் பார்க்க செய்தவன் தாஸ்தாவஸ்கி. அதாவது 0 டிகிரியில். நான் நம்மூர் 0 டிகிரியை சொல்லவில்லை. 
அப்போதெல்லாம் எழும்பூரில் ரயிலைவிட்டு பாலத்தின் மீது நடக்கும் போது எங்கள் பேராசிரியர் கீழே குனிந்து தண்டவாளத்தைப் பார்க்க சொல்வார். அப்படி கீழ் நோக்கி பார்க்கும் போது ஏற்படும் அனுபவத்தை தாஸ்தாவஸ்கி இவ்வாறு சொன்னதாக சொல்வார். கீழ்நோக்கி பார்க்கும் போது அந்த பாதாளத்தில் குதிக்க வேண்டும் என்று நமக்குள்ளாக ஒருவித விருப்பம் தோன்றுமாம். அதனால் அத பாதாளத்தை பார்வையிடுவதை தவிர்ப்பது நல்லதாம். இல்லையெனில் பாதாளம் நம்மை விழுங்கி விடுமாம். குதிக்க வேண்டும் என்ற விருப்பம் நம்மிடத்தில் இருக்கிறதா அல்லது அது பாதாளத்தின் கவர்ச்சியா என்ற கேள்வியையும் போட்டு சிந்திக்க வைப்பார் பேராசிரியர். வாழ்க்கையை அப்படி கீழ் நோக்கி ஆழத்தை காண முயன்றவன் தாஸ்தாவஸ்கி. ஆழம் பிடிபடாது. ஆழம் காணவும் முயளக் கூடாது. பாதாளம் நம்மை அதனுள் ஈர்த்துக் கொண்டு போய்விடும். அதனாலேயே ஆழம் நோக்கி ஈர்க்கும் தாஸ்தாவஸ்கியை விட உயரம் நோக்கி அழைக்கும் டால்ஸ்டாயை எனக்கு அதிகம் பிடிக்கும்.
ஆழம் உயரம் இவ்விரண்டின் மத்தியில் இந்த தொங்கிக் கொண்டிருக்கும் அழகிய தோட்டத்தைக் கண்ட அனுபவம் பயணத்தில் என் மனதில் அழியாது பதிந்து போன காட்சி. அதிலும் அந்த கோடிப்பூக்களின் மகரந்த வாசனை நுரையீரலில் நின்று கொண்டே இருக்கும் போலிருக்கிறது. மகரந்தத்தின் வாசனையையும், தேனையும் அந்த தேனீக்கள் நுகரவும் சுவைக்கவும் செய்யுமா என்பது இப்போது நுண்ணுணர்வுக்காரகளிடமும், தர்க்கவாதிகளிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. மலரின் வாசம் அதன் இதழ்களில் இருக்கிறதா? அல்லது அதன் மகரந்தத்தில் இருக்கிறதா? என் கருத்து படி தேனீக்களுக்கு மலரின் வாசனை தெரியாது என்றுதான் நினைக்கிறேன்.         


Monday, May 7, 2018

மலேசியா பயணக்குறிப்பு (3): ஒரு பூவும் சிறு குருவியும்

மலேசியா பயணக்குறிப்பு (3): ஒரு பூவும் சிறு குருவியும்
The Waste Land கவிதையில் எலியட் லண்டன் நகரத்தின் துரிதமான காலை நேரத்தைப் பற்றி பேசுவார். கூட்டமாக வேலைக்கு செல்லும் கும்பலில் தானும் ஒருவராக ஒருவருக்கு ஒருவர் பரிட்சயம் அற்ற நிலையில் கூட்டதில் தனிமையில் தலை கவிழ்ந்து நடந்து செல்கிறார். அக்கூட்டத்தில் ஒருவரை மாத்திரம் பார்த்து "There I saw one I knew, and stopped him, crying: “Stetson!" என்று கத்துகிறார். மாபெரும் கூட்டதில் தனிமையில் பிடித்த ஒருவரை பார்க்கும் போது ஒரு நிம்மதி பெருமூச்சு. கவிதையில் அவர் சந்தித்த நண்பர் எஸ்றா பௌன்ட் என எங்கள் பேராசிரியர் சொல்வார்.
அதே போன்றதொரு நிம்மதி பெருமூச்சு மலேசியாவில் எனக்கு எற்பட்டது. எலியட் கண்ட உற்ற நண்பனை பார்த்த நிம்மதி போன்றது அது. நான் பார்த்தது ஒரு பூவைம் ஒரு குருவியையும். எப்படி அந்த பாம் மரங்கள் மலேசியவைப் பற்றின ஒரு பிம்பத்தை எற்படுதுகிறதோ அதே போன்றதொரு மலேசியா பற்றின பதிப்பை இந்த இரு அழகுச் சித்திரங்கள் ஏற்படுத்தின.
காலை உணவுக்காக விடுதிக்கு சென்ற போது இவர்கள் இருவரையும் கண்டேன். விடுதிக்கு ஒருவித செடியினால் வேலி அமைத்திருந்தனர். சற்று உற்று நோக்கும் போதுதான்; நீயா என்ற அந்த எலியட்டின் ஆச்சரியம். நம்மூர் பூச்செடிதான்.
வேலியின் மீது நம்மூர் பரிட்சயமான பறவை ஒருவர் பறந்து செல்கிறார் - மைனா.
நகரத்திற்குள் செல்லும்போது நாட்டின் தேசிய மலர் வண்ண வண்ண மின் விளக்குகளால் சாலையோரம் எங்கும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. சிவப்பு வண்ண டாம்பீகம் இல்லாத எளிமையான மலர்கள் அவைகள். சொன்னால் அட இந்த மலரா? என்று ஆச்சரியப் பட்டுப் போவீர்கள். வேறொன்றுமில்லை - செம்பருத்திதான். இதுதான் இங்கு தேசிய மலர்.
பிரம்மாண்ட நகரத்தின் மத்தியிலும் நம் தமிழ் பறவைக்கும் மலருக்கும் தாராளமான இடம் இருக்கிறதே.
அதனால் என்ன? என்று எவரேனும் கேட்கலாம். இதனையே ஆங்கிலத்தில் "So what?" எனக் கேட்டால் அவமானம். இந்த விசயத்தில் நமக்கு தமிழை விட ஆங்கிலம் சுறுக்கென்று குத்தும். கூட்டத்தில் எலியெட் தன் நண்பனை பார்த்ததாக சொன்னதற்கு "so what?" என்று கேட்கலாம். கவிதை பின்நவீனத்துவ கவிதை அல்லவா. கேள்விக்குக்கு பதில் அளிக்கும் பொறுப்பு கிடையாது.

Saturday, May 5, 2018

சிங்கப்பூரில் சிட்டுக்குருவிகள் மத்தியில்: காக்கை குருவி எங்கள் ஜாதி (சிங்கப்பூர் பயணக் குறிப்பு 1)



சிங்கப்பூரில் சிட்டுக்குருவிகள் மத்தியில்: காக்கை குருவி எங்கள் ஜாதி (சிங்கப்பூர் பயணக் குறிப்பு 1)

இன்று சிங்கப்பூர் சுற்றுளாவின் இரண்டாம் நாள். இராட்சத சக்கரத்தில் சாகச பயணம். அதற்கு முன்பு கடல் ஓரத்தில் கடல் கோள் பகுதியை நிலமக்கிய பிரம்மாண்ட இடத்தில் சிறிது நேர பார்வையிடல். மனித முயற்சியின் பிரம்மாண்டம் இப்பகுதி. இயற்கையின் பிரம்மாண்டம் எனக்குள் பிரமிப்பை உண்டாக்கும். ஆனால் மனிதனுடையதோ தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி என்னையே அறியாமல் தும்புறுத்திக் கொல்லும். எல்லாவற்றையும் பார்த்து முடித்து கரையோரமாக கட்டிட மேடையில் நீர் நிலையை பார்த்தவாறு அமர்ந்திருக்கிறேன்.
சீனர் ஒருவர் ரொட்டித் துண்டுகளை வீசிக் கொண்டிருக்கிறார். புறாக்கள்  ஒன்று கூடி அவைகளை கொத்தித் தின்கின்றன. ஓரமாக காகம் தனக்கான சமயத்தை எதிர்பார்த்து கத்துக்கிடக்கிறது. இவர்கள் அனைவரின் சாப்பாட்டையும் காகம் ஒருவரே ஏப்பம் விட்டுவிடுவார் போலிருக்கிறது. இமைக்கும் நேரத்தில் மற்றொருவர் போட்டிக்கு வருகிறார். மிக மிக சீன்னஞ் சிறு குருவி - சிட்டுக்குருவி. அவ்வளவு பெரிய பருத்த உருவங்களை பொருட்படுத்தாமல் எல்லாம் எனக்கே என்று அனைத்தையும் படுவேகத்தில் கொத்திக் கொண்டு மின்னல் வேகத்தில் பறந்து செல்கிறது. சின்னஞ்சிறு சிட்டையும் புறாக்களையும்  ஒன்றுசேரத்த உருவமாக காக்கை  மாத்திரம் ரொட்டி தன்னை தேடி வரட்டும் என காத்துக் கிடக்கிறது.
சிங்கப்பூரின் இந்த பிரம்மாண்ட அழகிய கட்சியின் மதியில் ஒரு ஓரமாக அமர்ந்து இந்த சீனரின் வள்ளல் பெருங்கொடையில் பயனடையும் இந்த மூன்று வித பறவைகள் உணவு உண்டு பசியாறும் கட்சியை கண்டு களிக்கிறேன்.
மொபைலில் இருந்து புகைப்படம் எடுக்க ஆவல் தூண்டுகிறது. இப்போது நடத்தப்படும் காட்சி சீனருடையது. எப்படி நான் உள்ளே நுழைந்து அதனை படம் பிடிக்க முடியும்? மனசாட்சி உறுதுகிறது. கொஞ்சம் நேரத்தில் நான்கைந்து சிட்டுக்கள் கூடிவிட்டன. மற்றொரு சீனக் குடும்பம் சடார் என்று உள்ளே நுழைந்து பயமுறுத்துகிறார் "ப்பா" என மிரட்டல். பாவம் எல்லாம் சிதறி ஓடிவிட்டன.
கொஞ்சம் நேரம் கழித்து மீண்டும் ரொட்டிதுண்டுகள்  வீசப்படுகின்றன மீண்டும் மூன்று ஜாதிப் பறவைகளின் சங்கமம். ரொட்டி தன் பக்கம் வரும் என காகம் இன்னும் காத்துக் கிடக்கிறது. மைனாக்கள் கொஞ்சம் கூடிவிட்டன.
இன்னொரு சீனர் ஏற்படுத்திய சலனம் என் மனசட்சியின் குற்றவுணர்வில் இருந்து விடுத்தலையாக்கி விட்டது. கைபேசியை எடுத்து தைரியமாக அந்த சீனர் ஏற்படுத்திய காட்சியை படம் பிடிக்கிறென்.
பொல்லாத சிட்டுக்குருவிகள் அதீத வேகத்தில் ரொட்டிதுண்டுகளை அதிகாரமாக கொதிக்கொண்டு செல்கின்றன. இறைவனின் மிகச்சிறு படைப்பு மனிதனின் பிரம்மாண்டத்தை அலட்சியப்படுத்தும் தருணமாக இந்நிகழ்வு அமைந்து விட்டது. டூர் குருப்பை காணவில்லை. கல்லூரி முதல்வர் கோபத்தோடு  காத்துக்  கொண்டிருப்பார். கிளம்ப வேண்டும்.

Thursday, May 3, 2018

மலேசியா, நம் கண்முன் விரியும் தேசம் (பயணக் குறிப்பு 2)

நம் கண்முன் விரியும் தேசம்

ஓவ்வொரு நிலமும் அதற்கான தனித்துவத்தைக் கொண்டிருக்கிறது. அது அந்நிலதின் குறிப்பிட்ட வாழ்வியல் முறையாக இருக்கலாம் அல்லது அந்நிலத்தின் இயற்கை வளமாக இருக்கலாம். இவைகள் அனைத்தும் அங்கேயே பிறந்து வளர்ந்த ஒருவருக்கு ஒரு பொருட்டாகவே தெரியாது. மற்றமை என்ற நிலையில் இருந்து பார்க்கும் போது அந்த நிலத்திற்கு உரிய சிறப்பு அம்சம் தனித்துவமாக காணப்படும். இதற்கு அந்த மற்றமையின் நிலையில் இருந்து நம்மையும் அல்லது மற்றவரையும் பார்க்க வேண்டியிருக்கிறது.
நீண்ட நாட்களுக்கு முன்பு காலனிய காலத்து இந்தியாவை சித்தரிக்கும் நாவலை ஒன்றை வாசித்தேன். நாவலில் உள்ள ஓரே ஒரு படிமம் இந்தியா என்றால் என்ன என்ற உணர்வை கொடுத்தது இங்கிலாந்தில் இருந்து துரைச்சானி அம்மாள் இந்தியா வருகிறாள். துறைமுகத்தில் இருந்து சத்தம் ஒன்று கேட்கிறது. நிலப்பகுதியில் இருந்து வரும் சத்தத்தை இவ்வாறு பதிவு செய்கிறாள்: ஆயில் ஊற்றப்படாத மாட்டு வண்டி சத்தத்தை முதல் சத்தமாக இந்தியாவுக்குள் நுழையும் போது கேட்டேன் என்று.
துரு பிடித்த நிலையில் உள்ள கட்டை வண்டியின் சத்தம் எவ்வளவு தூரத்திற்கு நம் பண்பாட்டின் சத்தமாக அவர்களை  வியந்து கேட்கச் செய்யும் சத்தமாக இருந்திருக்கும். அந்த சத்ததின் வழியே நம் தேசத்தை நாம் பார்க்கிறோம். "க்ரீச்சிடும்" வண்டி சக்கரம் நம் பரந்து விரிந்த தேசத்தைப் பார்க்கும் படிமம். (படிமதைப் பற்றி எனக்கு என்ன தெரியும். எல்லாம் ஒரு உட்டான்ஸ்தான்).

மலேசிய வந்து இறங்கியதும் கண் முன் விரிந்த காட்சி ஒரு வித தென்னை போன்ற மரங்கள் முழு தேசத்தையும் நிரப்பி கிடக்கின்றன. பேருந்தில் முன்னால் நின்றுகொண்டு வரைபடத்துடன் guide நாட்டைப் பற்றி விளக்க ஆரம்பித்தார். முதலாவது இந்த தென்னை போன்ற மரம். பாம் எண்ணைக்கான மரமாம். அடுத்தது பெட்ரோல் பற்றி பேசினார். இங்கு உள்ளது போன்று பெட்ரோல் நாம் நாட்டில் மலிவாக இருந்தால் ஸ்கூட்டரிலேயே வட்ட முனை இமயமலையில் இருந்து தென்கோடி குமரி வரை ஊர் சுற்றலாம். மெய்ஞானமும் அதிகமாகும்.

கோலாலம்பூர் பட்டணமே பெரிய  கல்லூரிகளின் வளாகத்தை பொன்றதொரு  பராமரிப்பு.

Tuesday, May 1, 2018

மலேசியா பயணக் குறிப்பு(1)

மலேசியா பயணக் குறிப்பு

தினமும் நாம் கடக்கும் சாலை முக்கியத்துவம் அற்ற ஒன்று. மிகவும் பழகிப் போன மும்மரமான சில மணி நேரங்களுக்கான உலகம் அது. அது அன்றாடதின் பகுதி. பழமையின் சாரம் ஊறிப் போனது அந்த அன்றாடத்தின் அங்கம். ஒரு பொருளை வாங்கிய புதியதில் அந்த பொருளின் மீது நமக்கு இருக்கும் புதுமையின் பார்வை எப்படி நீண்ட நாட்களுக்கு பின்பு முக்கியத்துவம் அற்ற புளித்து போன ஒன்றாகி விடுகிறதோ அதே போன்று இந்த சொற்ப நேர பயணத்தின் பாதை பழமையுமாகவும் இல்லாமல் புதுமையாகவும் அல்லாமல் ஏதோ ஒன்றாக இருக்கிறது. இதுதான் யதார்த்தமோ? இந்த ஏதோ ஒன்றுதான் நாவலில் யதார்த்தவாதம் போலும்.

ஊர் பயணம் என்றதும் அதே சாலை திருவிழா கோலம் பூண்டு விடுகிறது. ஏன் இப்படி ஒரு மற்றம் பார்த்து பழகிய பொருளின் மீது எற்படுகிறது. இதே உணர்வை வித்தியாசம் வித்தியாசமாக நாவலாசிரியர்கள் தங்கள் படைப்பில் கொண்டுவருவதும் படைப்பின் சூட்சமம்தான்.
இப்பொது கடல் (இல்லை) விண் கடந்து வேறு தேசம் செல்கிறேன். பழகிய அன்றாடத்தின் சாலை நேராக மலேசியாவுக்கே போவது போல் தோன்றுகிறது. 

Sunday, April 29, 2018

எனக்கு ஐந்து[1] வயதிலேயே டால்ஸ்டாயைத் தெரியும்


எனக்கு ஐந்து[1] வயதிலேயே டால்ஸ்டாயைத் தெரியும்
சாலையின் திருப்புமுனையில் நின்று கொண்டு ஒருவர் கைப்பிரதிகளை விநியோகித்துக் கொண்டிருப்பார். வேண்டாம் என்று உதாசினம் செய்பவர்கள் பலர். வாங்கி ’ஜோபியில்’ (சட்டைப் பை) போட்டுக் கொள்பவர்கள் சிலர். ஐந்து நிமிடங்கள் அதில் உள்ள உள்ளடக்கத்தை வாசிப்பவர்கள் மிகச் சொற்பம். எத்தனை கதைகள்! அவைகளை வாசித்த பின்பு ஒருவர் இலக்கியம் படிக்க நேரிட்டால் அது டாஸ்டாய் கதை அல்லவா? தாஸ்தாவஸ்கி கதை அல்லவா? என்று ஆச்சரியப்படக் கூடும். அப்படி அந்த கைப்பிரதியில் இருந்து என் ஒன்றாம் வகுப்பில் படிக்கக் கேட்ட கதை இன்றளவும் அது டால்ஸ்டாய் கதையல்லவா? என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. டாட்ஸ்டாயின் அந்த கதையைப் இப்போது படிக்கும் போதெல்லாம் எனக்கு அந்த ஐந்து வயதில் கதை கேட்ட அனுபவம் அந்த கதையின் மீது மெல்லியதொரு உணர்வாக படர்ந்து செல்லும். கைப்பிரதிகளை வாங்கும் போதெல்லாம் நிச்சயம் ஒரு அருமையான கதை அதில் இருக்கும் என்ற நிச்சயம். வாங்கிய உடன் இரயிலில் ஓரத்தில் அந்த கைப்பிரதியில் இருக்கும் கதைக்கு கொஞ்சம் மரியாதை செலுத்தி வாசிப்பேன்.
இறைமைந்தன் ஒரு உவமைக் கதையைச் சொல்வார். விதைக்கிறவன் விதைக்கப்புறப்பட்டான். சில விதைகள் முட்கள் நிறைந்த இடத்தில் விழுந்தன. சில விதைகள் பாறைகள் நிறைந்த இடத்தில் விழுந்தன. சில விதைகள் வழியோரம் விழுந்தன. சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்து முளைத்து ஐம்பதும் நூறுமாக பலன் கொடுத்தன. நம்மீது இவ்வாறு விதைக்கப்படும் கதைகள் என்னும் விதைக்கு நம் மனதின் நிலம் கொஞ்சம் இடம் கொடுத்தால் மிக நலமாக இருக்கும். அப்போது வாசிக்கவே ஆரம்பிக்காத பருவம். சிறு பையன் பாதுகாப்புக்காக ஏழாம் வகுப்பு படிக்கும் என் ஊர் அக்காக்களுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். கைப்பிரதி விநியோக்கிக்கப்பட்டிருந்தது. வற்றிய ஏரியில் அந்த ஐந்து பேர் நற்செய்தி கதையை மெல்ல மெல்ல படித்துக் கொண்டே சென்றோம். அதுதான் என் வாழ்க்கையின் முதல் கதை. அந்த கதையின் ஆசிரியன் ஒரு மாபெரும் ரஷ்ய எழுத்தாளன் என்று அன்று தெரியாது. அதுவே முதல் விதையும் கூட. உறைந்து கிடந்த உள்ளம் எழுச்சிக் கொண்டு மலர்ந்த அந்த அனுபவம் இன்னும் எந்தப் பிரதிக்கும் ஏற்படுகிறதில்லை. கதை கேட்டல் என்பது அவ்வளவு அலாதியான அனுபவம்.
பெரிய பணக்காரன் ஒருவன் தன் நிலத்தில் வேலை செய்யும் அடிமைகள் அனைவரையும் அழைத்து நிலங்களை இலவசமாக கொடுக்கப்போவதாக வாக்களிக்கிறார். அது ஒரு நிபந்தனையின் பேரில் நடக்கப்போகிறது. தன் மண்வெட்டியை எடுத்துக் கொண்டு தனக்கு எவ்வளவு நிலம் வேண்டுமோ அவ்வளவு தூரம் ஓட வேண்டும். போதும் என்று திருப்தி உண்டான பின் ஓடி முடித்த அந்த இடத்தில் மண்வெட்டியால் ஒரு அடையாளத்தை இட வேண்டும். ஓட ஆரம்பித்ததிலிருந்து அந்த அடையாளமிடப்பட்ட இடம் வரையிலான நிலம் ஓடியவனுக்கே சொந்தமாகும். ஒரு அடிமை மாத்திரம் பேராசையில் மண்வெட்டியை எடுத்துக் கொண்டு ஓட ஆரம்பிக்கிறான். திராணி உள்ள மட்டும் ஓடுகிறான். அவனுக்கு போதுமான நிலத்தை ஓடி முடிக்கிறான். இன்னும் நீண்ட தூரத்திற்கு நிலம் விரிந்து கிடக்கிறது. ஓடியதில் போதுமான நிலம் கையகப்படுத்தியாயிற்று அதற்கான உழைப்பையும் செலவழித்தாயிற்று. உழைப்பிற்கு ஆதாரமான ஆற்றலும் செல்வழித்தாயிற்று.
ஆசைக்கு ஏது ஆற்றலின் அளவு அல்லது எல்லை? பேராசை தனக்கான எல்லையை உதாசினம் செய்துவிடுகிறது. அதன் ஆற்றலின் விரையத்திற்கும் மீறி ஆசை கொடுத்த உத்வேகத்தில் மேலும் ஓட ஆரம்பிக்கிறான். திரும்பிச் செல்வதற்கான ஆற்றலும் இப்போது விரையமாக்கப்பட்டாயிற்று.
நிபந்தனை என்னவெனில் நிலத்தின் அடுத்த எல்லையில் அடையாளத்தைப் போட்டுவிட்டு திரும்ப வந்துவிட வேண்டும். திரும்பி வந்தால் மட்டுமே நிலம் இல்லையேல் நிலம் கிடையாது. திரும்பி வருவதற்கான தன் ஆற்றலை அவன் ஏற்கனவே தன் எல்லையை மீறி சென்று செலவழித்துவிட்டான். திரும்புவதற்கான ஆற்றல் ஆசை கொடுத்த ஊக்கம். அது தன் உடல் சக்திக்கு மிஞ்சினது. திரும்ப துவங்கிய இடத்திற்கு சென்று நிபந்தனையை நிறைவேற்ற வேண்டும். ஆசை கொடுத்த ஊக்கத்தில் திரும்ப ஓட ஆரம்பிக்கிறான். எஜமான் நிலத்தைக் கொடுக்க காத்துக் கொண்டிருக்கிறார். ஓடிவந்தவன் எஜமானனுடைய காலடியில் பொத் என்று விழுகிறான். அவனுக்கான நிலம் இப்பொது உடமையாக்கப்பட காத்துக்கிடக்கிறது. கொடுமை என்னவெனில் அதனை அடைவதற்கு இப்போது அவன் இல்லை.
அவன் ஓடிய அதே நிலத்தில் அவனை புதைக்கிறார்கள். பரந்து விரிந்த அந்த நிலத்தில் அவனுக்கு கடைசியில் எஞ்சியது ஆரடி நிலம் மாத்திரமே! அவன் ஓடிய அத்தனை தூரமும் இந்த ஆரடி நிலத்திற்காக மாத்திரமே. அத்தனை ஏக்கர் நிலமும் இப்போது அவனுக்கானதுதான் அவன் உடல் உடமையாக்கப்போவதோ அந்த சிறிய அளவு உடல் தாங்கும் நிலம் மாத்திரமே.
இப்போது டால்ஸ்டாயின் ”How Much Land Does a Man Need” கதையை வாசிக்கும் போதெல்லாம் 1995ல் கேட்ட அந்தக் கைப்பிரதியின் கதை ஞாபகத்தில் வருகிறது. நான் கேட்ட அந்த கதை இந்தக் கதைதான். அப்போது யாருக்கு தெரியும் அந்த கதை டால்ஸ்டாயின் கதை என்றொ அல்லது அவர் ஒரு ரஷ்ய எழுத்தாளர் என்றோ என. ஆனால் அந்த கைப்பிரதிக்கு கொடுத்த அந்த பதினைந்து நிமிட மரியாதை அதுதான் வாழ்வில் முதல் கதை என்ற விதையின் ஊன்றுதல். அந்தக் கதை அப்போது ஏற்படுத்திய பிரம்மாண்டம் இப்போது போரும் வாழ்வும் நாவலைப் படிக்கும் போது கூட அவ்வளவு பிரம்மாண்டமாக இல்லை. அச்சிறுவயதின் மூளைக்கு அதுதான் பிரம்மாண்டம்.
இப்போதும் கைப்பிரதிகள் கொடுக்கப்படும் போது வாங்கி கதையை வாசிக்க தோன்றுகிறது. அதனை வாங்கி இரயிலின் ஓரத்தில் பத்து நிமிடங்கள். வாசிப்புக்கு நம்மைச் சுற்றிலும் பிரதிகள் விதைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. நாம் ஒதுக்குகின்ற அந்த ஐந்து நிமிட வாசிப்புதான் நம் மனது எப்படிப்பட்ட நிலம் என்பதை தீர்மாணிக்கப்போகிறது.


[1] ஐந்தை ’அய்ந்து’ என எழுதினால் எவ்வளவு கடுப்பாகும் என யோசித்து பாருங்கள். ’மை’யை மய் இடமாற்றம் செய்யும் போது ’ஐ’யை அய் இடம் மாற்றினால் தவறு ஒன்றும் இல்லை.


Sunday, April 22, 2018

The Parentage of Royal Enfield


The Parentage of Royal Enfield
To own a Royal Enfield or a Thunder Bird is a matter of prestige. It is not just a matter of someone showcasing his wealth. It is something else in which we cannot relate it with money. A person who owns this motor cycle need not to a rich man. He stands beyond the measurement of currency value. On the road if we happened to hear that thundering noise of the gigantic machine installed in that cycle we may imagine the personality of whom the cycle bears him on its cushion comfortably. It is indeed a matter of prestige to ride this vehicle.
Various impressions cross through our mind on this motor cycle and riders come across our memory. They are from various moments and different stages of my life. First time I saw this bike in my village. To spend time in our village in the afternoon is an eerie experience. The dead silence engulfs the whole village in the noon. Village folk drive their cattle at 9am in the morning for the pasture. From nine to three the village is abundant with the world of insects ad birds. Only the chirping of the sparrows will penetrate our ear drum. Noon is the world of insects and birds. In other time human world and ghostly world overpower the existence of those pretty creatures. One should call Romantic poets to appreciate this noon time of our village. Nowadays those eerie moments turn out to become the highland moss in “Solitary Reaper”.
In this backdrop one could clearly hear the noise of the Bullet from half a kilometer. Abbu Bhai the gigantic figure grandly fits in the big motor cycle. He parks the bike at the corner of the street and visits the former’s manger. When he goes back to his town the bike carry young male buffalo or an ox. When cattle breeds he-goats or oxen they are destined to the slaughter house of Abbu Bhai. Farmers do not prefer the overabundance of he-goats and bullocks in their mangers. When the number increases message is sent to Abbu Bhai. To carry the big size cattle bullet is the right choice. Dump animal meekly goes with him on the Thunder Bird. Neither we children nor the manger do know the destiny of the poor creatures when the thundering noise fades away in the air from our village. For me the gigantic motor cycle is the object of desire to observe it until Bhai comes with bullock or buffalo to tie them on the bike.  
Constantly I gaze at each and every part of the bullet particularly of its engine. The Machine is something special to me. I started to like Royal Enfield not for the desire of ridding but for the engine alone. The reason for my liking the engine is that the similar is the engine which we used for irrigation very long ago. In the month of ‘margazhi’ at the age of four early in the morning I used to go with my Appa and Periyappa to our farm land. Early at five o’clock they have to start the engine to pump water to paddy. The engine is a magic still now. Still one specimen is there in our village at leisure after its much toil. Akka told me that the Enfield also carries the same size of the engine. In the cold morning engine wont pickup. Our Periyappa collects dry cow dung to fire the magnet of the engine in order to warm up the engine. This is the routine activity in the morning. Half of their energy will be wasted in this process. When diesel engine came everything have become smooth. But that old engine demanded the cooperation of four kith and kins. One man is not enough to start that small engine. But the gigantic diesel engine needs a single man power. Treacherously the diesel engine brought discard in our family. It separated my father and our Periyappas into four. They started to act independently. But that old small engine reminds me of our family unity. Same is the refreshed feeling when the engine of the Royal Enfield is visible to my eyes on the road.   
In my twelfth standard two brothers came to our village with glade tiding on the age old engine of Royal Enfield. This engine always reminds me of something of the parentage when it puffs out its energy as smoke out of toil. Abbu Bhai’s Royal Enfield may remind me of the slaughter house. But not our household engine and the later one in my twelfth standard. Those two Brother’s Royal Enfield bikes comfortably carried me on its cushion.                                

Old Women in MTC: Age cannot Wither their Reserved Strength



Old Women in MTC: Age cannot Wither their Reserved Strength
It is the strength that keeps old age in respect. When strength fails life falls into miserable state. If a little amount of strength is reserved after seventies, life will go on peacefully. The truth is realized not by experience but by witnessing an incident in an MTC bus. The moment we get into the bus our only botheration is how to manage the conductor with hundred a rupee note. He will be like a land lord of hundred acres and we as the vassal under his regime. Whatever may be our social status, in that moment the so called Tamil plural respect will be diminished into singularity - நீ வா போ. Many times I had an urge to tell him “Don’t you know who Am I. I am …..”. I swallow the half at the moment it raises above my throat because he should not insult me with the reply, “so what?”.
If people like us in the prime of life would be treated in this way then surly this is not the world for old people. For them bus will rush from the stop without considering whether the passenger entered or not. Last Sunday my travel from Santhosapuram to Palavakkam brought a new insight on the truth that reserved strength for old age always earns respect for them.
The bus is filled with old women. Next to the three stages from Santhosapuram people thronged at the bus door to get into it. Crowd does not care for the old lady in their midst. She can be in the age of seventy. She returns from her day’s work selling fish in the market. She is the last one trying to squeeze into the crowd. She manages to lay her foot on the step in that madding crowd. But the crowd stayed up to the last step of the entrance.
The old lady started to beat an eighteen year old girl. She is not ready to move an inch. She almost blocks the space. The ultra deluxe (bus) is known for its hydraulic doors. Conductor may not be punctual in tearing the ticket and the driver may not be concerned about passengers to be dropped in their right spot but hydraulic doors do their duty even without the consent of the driver. Old lady is trying her best to be forced into the crowed passage. Her reserved strength could not challenge that crowd. Doors are closed and her right ankle is caught in the fringe of the closed doors.
Instinctively I grab the old lady’s left ankle to pull her into the bus. Thank God! She is rescued. Otherwise the duty bound hydraulic doors would have spewed her out of the bus. When she is pulled into the bus she is very ferocious for the injustice done to her. With her fragile hands she started to beat the eighteen year old girl. Seeing her daughter being beaten up by the old lady, girl’s mother raised her arms against the old lady. I could not tolerate the situation. I shouted at girl’s mother to keep quiet. Then I look at her situation that she too is in difficult situation holding her daughter’s newborn baby. She has to preserve both the newborn baby and the mother. My goodness I did not lose many words on them. A lady gave a seat for the old lady. Mother and daughter are still standing in the middle of the deck holding the fragile creature. Bus is very closer to ECR. Another stop! One more lady in her reserved strength! Here, the revealed truth is that reserved strength would not help her much. With much difficulty she managed to climb two steps and sat on the deck. Voice comes from the bus, “Appa, see, you have one more service”. Now I have to be more vigilant. She should not fall off from the door. With her bamboo basket the first old lady like an eighteen year girl swiftly walked out of the bus and disappear. I amazed at her strength in the old age. It is not the vitality of the age or the nutritious food which enables her to stand firm in the madding crowd. Much more than this something keeps them in the reseved strength in their old age. But the lady who entered the bus now still sits on the deck out of exhaustion. But her mind is very clear. “Appa one ticket to Vetuankanni”. Age cannot wither their reserved strength. I strongly feel that certainly it is not the food and the food without chemical which blesses them in vitality. May be it is goodness of the one and cheerful heart which preserves the reserved strength at the age of seventy and above.       


Saturday, March 31, 2018

கவித்துவத்தின் உச்சங்கள்


கவித்துவத்தின் உச்சங்கள்
தந்தை மகன் உறவைப் பற்றி கட்டுரை எழுதப்போக அது “Prodigal Son” உவமைக் கதையை நினைவுப்படுத்தியது. அதைப் பற்றின நல்ல படம் இருக்குமா என தேட Rembrandtன் இந்த ஓவியம் கிடைத்தது. இந்த ஓவியரைப் பற்றி எங்களுடைய பேராசிரியர் அதிகம் பேசியிருக்கிறார். பசுமாட்டிற்கு பிடில் வாசிப்பது போன்று அவர் பேசுவது அப்போதெல்லாம் இருக்கும். ஒன்றும் விளங்காது. இப்போது மிகவும் மானசீகமான ஒரு கதைக்கான Rembrandt ன் ஓவியம் எனக்கு ஓவியத்தைப் பற்றின பெரிய திறப்பை ஏற்படுத்திவிட்டது.
ஊதாரி மகன் கதை இதுதான்; அப்பாவிடம் இருந்து சொத்தை பாகம் போட்டுக் கொண்டு தூர தேசம் செல்கிறான் இளைய மகன். காமக் களியாட்டு என தகாத வழிகளில் பணத்தை செலவழிக்கிறான். பணம் மொத்தம் காலியாகிவிடுகிறது. ஊரில் பஞ்சம் வேறு ஏற்பட்டுவிடுகிறது. ஊரில் உள்ள குடியானவன் ஒருவனிடம் தஞ்சம் புகுந்து பன்றி மேய்க்கும் தொழில் செய்கிறான். பன்றி மேய்க்கும் போது பசிக்கு பன்றியின் உணவை சாப்பிடப் போக பன்றியின் உணவை அவனிடம் இருந்து தட்டிப் பறித்துவிடுகிறார்கள். இப்போது அவனது அப்பாவின் நினைவு வருகிறது. அப்பாவின் வீட்டில் வேலைக்காரர்களுக்கே நல்ல உணவு இருக்கும் போது தான் இங்கு பன்றியின் உணவைக் கூட சாப்பிட முடியாமல் இருக்கிறேனே என்று மனம் வருந்தி வீட்டிற்கு நடையைக் கட்டுகிறான். அவனுடைய அப்பாவோ அவன் சென்ற நாள் முதல் அவன் வீடு திரும்பும் இந்நாள் வரை அவனுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். மகன் தூரத்தில் வருவதைக் கண்டு ஓடிச் சென்று அவனை அரவணைத்துக் கொள்கிறார். அப்பாவும் மகனும் சந்திக்கும் தருணம்தான் இந்த ஓவியத்தின் காட்சி. மகனை வரவேற்கும் படமாகத்தான் முதலில் நாம் இந்த ஓவியத்தை பார்ப்போம்.  
ஓவியத்திற்குள் சூட்சமங்கள் பல உள்ளன. அதனை தேர்ச்சி பெற்ற ரசனையாளர் ஒருவர் அங்கம் அங்கமாக விளக்கும் போது வியப்பு மேலிடுகின்றது. முதலில் இந்த ஓவியத்தை வெறும் படமாக பார்க்க முயன்றேன். ஓவியத்தைப் பற்றி The Family Project.com ல் படிக்கும் போது எத்தனை புதிர்களை இந்த ஓவியம் தன்னகத்தே கொண்டுள்ளது என வியந்தேன். முதலாவது மிக அதிக வெளிச்சம் அப்பா மற்றும் மூத்த மகன் முகங்களில் செலுத்தப்பட்டிருக்கிறது. ஓவியத்தின் பின்புறமோ மிகவும் இருள் கவ்வியதாக இருக்கிறது. அப்பாவின் முகத்தின் மீது செலுத்தப்பட்ட வெளிச்சம் நற்கருணையை காட்டுவதற்கு. மூத்த மகன் (ஊதாரி மகனின் அண்ணன்) முதத்தில் இருக்கும் வெளிச்சம் அவனது பொறாமையக் காட்டுவதற்கு.

அப்பா தன் கைகளை அகல விரித்து தன் மனம் திருந்திய மகனை அரவணைக்கிறார். அந்தக் கைகள் ஒன்று ஆணின் கையாகவும் மட்றொன்று பெண்ணின் கையாகவும் இருக்கின்றன. இது தந்தைக்குள் இருக்கும் தாய்மை உள்ளடக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. அதே போன்று மகனின் கால்களில் ஒரு பாதம் செருப்பு இல்லாமல் காயங்களால் நிறைந்திருக்கிறது. மற்றொன்றில் செருப்பு இருக்கிறது. வெறும் கால்கள் பலம் இழந்த நிலை அதனை தாய்மை அரவணைக்கிறது. பலம் இழந்த நிலையை இன்னும் பலம் கூட்ட மற்றொரு காலில் செருப்பு அணிந்த பக்கம் அப்பாவின் கை ஒரு ஆணின் கையாக அரவணைக்கிறது. இது இழந்த பலத்தை மீட்டெடுத்து அதிக பலம் பெறச்செய்வதற்கு.
ஓவியம் என்பது வெறும் படமாக இருக்கிறதில்லை. ஒரு கவிதையை வாசித்து பாராட்ட நமக்கு எப்படி டியூட்டர் தேவைப்படுகிறாரோ அதே போன்று ஓவியத்தை விளக்கவும் ஒரு interpreter அவசியப்படுகிறார். என் பேராசிரியர் வாசித்த பிடிலுக்கு இப்போது அர்த்தம் கிடைத்துவிட்டது என நினைக்கிறேன்.  வீடுதிரும்பும் ஊதாரி மகன் – கவித்துவத்தின் உச்சம்.

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...