Monday, December 25, 2017

சொல்லும், செயலும்


வழிமுறை எதுவாயினும் பரவாயில்லை இலக்கை அடைவதுதான் முக்கியம். அடையும் வழிமுறை எப்படிப்பட்ட ஒழுக்க மீறலில் செயல்பட்டாலும் அது ஒரு பொருட்டே அல்ல. இலக்குதான் முக்கியம். இதனை ஒரு மதவாதி பேசவே துணிய மாட்டார். செய்வது ஒன்றாக இருந்தாலும் அதனை நியாயமாகவே அவர் முன் நிறுத்தி பேசுவார். மதம் எப்போதும் உண்மையை தன் ஆடையாக போர்த்திக் கொண்டு எந்தக் காரியத்தையும் செயல்படுத்தும். அது நன்மையாக இருக்கட்டும் தீமையாக இருக்கட்டும் தன்னை முன்நிலைப்படுத்திக் கொள்வது உண்மை என்ற சாதனத்தின் மூலமாகவே. மதம் சற்று சாரம் பொருந்திய வார்த்தையான ’தர்மம்’ என்ற பத்தத்தை பயன்படுத்திக் கொள்கிறது. அந்த வார்த்தையின் வைப்ரேஷன் சற்று கூடுதலானது. மதம் மாத்திரமே கையில் எடுக்கும் பதம். அறம், தர்மம் இந்த வார்த்தைகளை தொட தத்துவவாதிகள் வெட்கப்படுவார்கள். மதம் அவர்களுக்கு ஒவ்வாமையை உண்டாக்குகிறது. இந்த வார்த்தைகளைத் தொட சற்று நாணுவார்கள். அப்படியே பயன்படுத்திவிட்டாலும் அவர்களுடைய நிலைப்பாடே மாறிவிடுகிறது. மதத்தின் தளத்தில் தங்களைப் பொருத்திக் கொள்கிறார்கள். சொல்லும் சொல்லே ஒருவருடைய அடையாளமாகிறதோ?
தத்துவவாதிகள் தர்மம், அறம், சத்தியம் என்ற மதம் சார் வார்த்தைகளுக்கு இணையான வார்த்தைகளைத் தங்களுக்கென வகுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அது செக்குலராகவும் இருத்தல் வேண்டும். நீதி, நேர்மை, நியாயம், உண்மை, ஒழுக்கம் என அதிகம் வைப்ரேஷன் ஏற்படுத்தாத வார்த்தைகளை அவர்கள் கையாள வேண்டியிருக்கிறது.
”அது சமஸ்கிருதம் இது தமிழ். அதிலும் ’அறம்’ செவ்வியல் தமிழ்”.
 விதண்டாவாதம் வம்புக்கு இழுக்கிறது.
 வார்த்தையின் வீரியம் ஒருவரை அதன் கட்டுப்பாட்டில் வைத்தைக் கொள்ளச் செய்கிறது. அல்லது தன்னால் அதன் கட்டுப்பாட்டில் இருக்க முடியாவிட்டாலும் அதற்கு ஏற்றார் போலவாவது நடித்தாக வேண்டியிருக்கிறது. நடிக்கும் போதே பயம் மன்னிக்கவும் அச்சம் பற்றிக்கொள்கிறது. அதுவே அறம் சார்ந்த விசயம் தானே?
இலக்கு முக்கியம் அதே நேரத்தில் அதனை அடையும் வழி நீதியான வழியாகவும், நேர்மையானதாகவும் இருத்தல் வேண்டும். இதனை அணுகும் போது பயம் ஏதும் நமக்கு ஏற்படுவதில்லை. ஆதலால் யார் ஒருவர் இவைகளை முன்னிட்டு காரியங்களை பேசுகிறாறோ அவருக்கு இந்த வார்த்தைகள் மீது அலட்சியம் அதிகம். இது மற்றவர்களை கட்டுப்படுத்தும் சாதனங்கள் மட்டும்தான். பயன்படுத்துபவர் எப்போது வேண்டுமானாலும் இவைகளை விட்டு விட்டு வெளியே போய்விடலாம். தன் விருப்பத்தை எந்த வழியை கொண்டும் இலக்கை அடைந்து விடலாம்.
”நீதி வேண்டாமா? நேர்மை வேண்டாமா?”
”அதைப் பற்றி எனக்கேன் கவலை”
இலக்கை அடைவதுதான் முக்கியம். இலக்கை அடைய ஒருவர் முன்னெடுக்கும் முயற்சியே ஒருவரின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு. வழியைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நாம் சேரும் இடமே முக்கியமானது. அது சொர்க்கமாகவே இருக்கட்டும் தர்மத்தின் வழி அவசியம் இல்லை. வழி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். சரி நீங்கள் தான் தத்துவவாதியாயிற்றே உங்களுக்கு ஏது சொர்க்கம். அப்படியெனில் இலக்கு வேறு ஒன்றா?
ஒற்றை இலக்கான சொர்க்கத்தை நீக்கிவிட்டால் ஓராயிரம் சொர்க்கங்கள். அடையும் வழிகளும் அநேகம்.
 ”பாவம் என்ற கல்லறைக்கு பலவழி / அந்த நீதி தேவன் கோவிலுக்கு ஒரு வழி”.
 இப்போது கல்லறையும் இல்லை கோவிலும் இல்லை, நீதி தேவனும் இல்லை. அவர் அப்போதே அண்ணாவின் நாடகத்தில் மூர்ச்சையாகிவிட்டார். அதையெல்லாம் மறந்து பல நாட்கள் ஆகிவிட்டது. அதனை பேசியவர்களின் சித்தாந்தங்களும் காலாவதியாகிவிட்டன.
காரணம் அவர்கள் முன் வைத்த வழிமுறை பொறுட்டல்லாத ஒன்றாகவும் அடையும் இலக்கே முக்கியமானதாகவும் மாறிவிட்டது. இதனை புத்தகத்தில் பேசிவிடலாம், தத்துவமாக ஊருக்கே பேசி கூட்டத்தையும் கூட்டலாம்.
 முன் வைத்த சித்தாந்தம் செயலுக்கு வரும்போதுதான் அது சரியானதா தீமையானதா என முடிவெடுக்கப்படும். கருத்தாக்கமாக எப்பேர்ப்பட்ட ஒழுங்கீனத்தையும் நியாயமாக ஆதரித்து பேசிவிட முடியும். அது செயலாக்கம் பெறும் போதுதான் அது தர்மமா, அறமா, நீதியா, ஒழுக்கமானதா, என அனைத்தும் மெய்ப்பிக்கப்படும். அதுவரையில் ஒரு கருத்தாக்கத்தைக் கொண்டு எதை வேண்டுமானாலும் நியாயமானதாகவும் நன்மையானதாகவும் பேசிவிடலாம். அனைத்திற்குமானது மெய்ப்பிக்கப்படும் செயல்பாட்டின் தருணத்தில் இருக்கிறது. செயல் ஒன்றே அனைத்திற்குமான நிவாரணி. அதுவரையில் எல்லாம் ஒன்றுபோல் தோன்றும். நல்லதை தீமை என வாதிடலாம் தீமையை நன்மை என வாதிடலாம்.
நன்மையும் தீமையும் அதன் தன் கருத்து நிலையில் இல்லை - அது செயலாக்கத்தில் இருக்கிறது. ஒருவர் தன் சிந்தனையை செயலில் காட்டட்டும். அது நல்லதா கெட்டதா என்பதை ஊர் தீர்மானிக்கும். அடையும் வழி முக்கியமல்ல இலக்கே முக்கியமானது என்பதை ஒருவர் கருத்தாக நூறு ஆயிரம் பக்கங்களாக புத்தகங்கள் எழுதி பேர் பெற்றுவிடலாம். அதனை செயலாக்கத்தில் கொண்டுவருவது துர்லாபம். மனத்திடம் வேண்டும். இதையெல்லாம் தத்துவாதிகள் கோட்ப்பாட்டாளர்கள் ”இப்படி இருந்தால் என்ன?” என யோசனையாக முன் வைப்பார்கள். அவ்வளவுதான். அவர்கள் அதனை ஒருபோதும் செயலாக்கத்தில் கொண்டுவரவே மாட்டார்கள். காரணம் அவர்கள் ஒழுக்க வாதிகள். அடிப்படையில் அவர்கள் மிகவும் நல்லவர்கள். மதவாதிகள் அதற்கு நேரிடையானவர்கள். சொல்வது ஒன்று செய்வது மற்றொன்று. சொல்வதோ தர்மம், சத்தியம், அறம். இவைகளை பேசுபவர்கள் ஒருப்போதும் அந்த வார்த்தைகளுக்கு உண்மையாக இருக்கவே மாட்டார்கள். காரணம் அவைகள் கோரும் ஒரு வாழ்க்கை இலட்சியமான வாழ்க்கை. தியாகம் அவசியம்.
சேதாரம் என தெரிந்த பின்பு எப்படி ஒரு மதவாதி அந்த வார்த்தைகளுக்கு உண்மையாக இருக்க முடியும். இதனால்தான் மிக அரிதாகவே மகான்கள் மிக சொற்ப எண்ணிக்கையில் நம் வரலாற்றில் சென்றிருக்கிறார்கள். சொல்லும் சொல்லை செயலாக்கம் பெற செய்வது எளிதெனில் அனைவரும் இயல்பானவர்களாகவும் வாழ்க்கையும் இயல்பனதாகவும் இருக்குமே. சொல்லை செயலில் கொண்டுவருவதற்கு உயிர்த்தியாகம் செய்ய முற்பட்டவர்களைத்தானே மகான்கள் என கொண்டாடுகிறோம். அனைவரும் மகான்கள் கிடையாதே.
இதில் தத்துவவாதிகளை அவர்கள் முன்மொழியும் கருத்துக்கள் எவ்வளவு ஆபத்தானதாக இருப்பினும் நம்பிவிடலாம். ஏனெனில் தங்கள் கருத்துக்களை ஒருபோதும் அவர்கள் நடைமுறைக்கு கொண்டுவரவே மாட்டார்கள். கதைகள் பல பேசி திரிவார்கள்.

தேடிச் சோறுநிதந் தின்று -  பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே  …………………………..


அதற்கு மேல்? ஒன்றும் கிடையாது. அது பாரதி கவிதையே ஆனாலும் அதனை என் கட்டுரையின் ஒட்டல் வெட்டல் பயன்பாட்டிற்கு பயன்படுத்துவேனே அன்றி பாரதியை ”என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்ய” அல்ல. கட்டுரையே கட்டுரையின் இலக்கு. 

Sunday, December 17, 2017

கரன் கார்க்கியின் ஒற்றைைப் பல்: நிணத்தின் வாடைவீசும் யதார்த்தவாதம்

கரன் கார்க்கியின் ஒற்றைப் பல்: நிணத்தின் வாடைவீசும் யதார்த்தவாதம்
யதார்த்தவாதத்தைப் பற்றி யோசிக்கும் போதெல்லாம் வெட்டி தோலுரித்து தொங்கவிடப்பட்ட மாமிசத்தின் மீது  எழும் நிணத்தின் வாடை நினைவிற்கு வரும். அனைவருக்கும் வாய்க்காத எழுத்தின் உத்தி யதார்த்தவாதத்தின் உத்தி. அதுவே உயர் கலை என கொள்ளலாம். வாழ்க்கை நம் கண் முன் தோலுரித்துக் காட்டப்படுகிறது. ஒருமுறை எழுத்தாளர் இமயத்திடம் பேசிக்கொண்டிருக்கும் போது யதார்த்தவாதம் பற்றி கேள்வி கேட்டேன். அவர் மிக இயல்பாக பதிலைத் தந்தார். பதில் கேள்வியாகவே இருந்தது. ”எழுத்தில் ஏது யதார்த்தம். பேனாவை தொட்டவுடனேயே கற்பனையில் இறங்கிவிடுகிறோமே?” இலக்கியத்தில் நாம் நினைக்கிற அதி தூய்மையான யதார்த்தவாதம் சாத்தியம் கிடையாது” என்று சொன்னார். எனினும் ரஷ்ய எழுத்தாளர் கார்க்கியைப் பற்றி யோசிக்கும் போதெல்லாம் A 1 பீப் ஸ்டாலில் எழும் மாம்சத்தின் நிண வாடை நினைவில் எழும்பும். வாழ்க்கையை அதன் நிர்வாண நிலையில் முதன்மைப்படுத்துவது அது. அதனிடம் அணுகிச் செல்லுவதற்கு நமக்கு ஏனோ பயம். இது பிரதியை பிரித்து வாசிக்காமலேயே ஏற்படும் பாதிப்பு. அதுவே கரன் கார்க்கியின் ஒற்றைப் பல் பிரதியின் மீது ஏற்படுகிறது.
ரஷ்ய கார்க்கியை கலைஞரின் ”தாய்” மொழிப்பெயர்ப்பின் பல ஆண்டுகளுக்கு முன் வாசித்திருக்கிறேன். யதார்த்தத்தின் நிணம்  பழக்கப்பட்டதுதான். இப்போது ஒற்றைப் பல்லையும் வாசிக்க வேண்டும்.

Thursday, November 30, 2017

ஆதித் தேடலும், செட்டிக்கடை வட்டியும்

ஆதித் தேடலும், செட்டிக்கடை வட்டியும்
புலன்களுக்கு சிக்காத எதுவொன்றும் நம்மை அச்சமூட்டக்கூடியவை. அதுவே ஐம்புலன்களின் ஆளுகைக்குள் உட்படும் போது அச்சம் நீங்கி ஆளுகை செய்ய வேண்டும் என்ற ஆவல் மேற்கொள்கிறது. நாம் எவ்வளவு தீரர்கள் என்பது பொருட்டல்ல. நம்முடைய பிரக்ஞையில், உணர்வுகளில் உட்படும் போது அது நமதாக மாறிவிடுகிறது. வானத்தின் உயரமும் கடலின் ஆழமும் நம்மை எப்போதும் பிரமிக்க வைக்கக்கூடியவைகள். யாரேனும் ஒருவர் அவைகளின் எல்லையைத் தொட்டுவிட்டு வரும் போது அந்த ஒருவரின் அனுபவம் நம் அனைவரின் அகந்தையாக மாறிவிடுகிறது. அந்த ஒருவரின் எல்லையைப்பற்றியக் கண்டுபிடிப்பு நம்முடையதாகவும் மாறிவிடுகிறது. காரணம் இதுதான்: அதுவரை எல்லையே ஒன்று கிடையாது என்ற சூட்சமத்தில் வாழ்ந்துவந்தோம் அதனால் அச்சம் பீடித்திருந்தது. எல்லை ஒன்று உண்டு என சொன்ன பின்பு அச்சம் நீங்கி “இப்பிரபஞ்சம் என்னுடையது” என்ற கர்வம் ஏற்படுகிறது. முடிவே இல்லாத ஒன்றில் நம் அச்சத்தை எப்போதும் வைத்திருக்கிறோம். முடிவற்றதின் எல்லையைக் கண்டடையும் போது அதுவரை நாம் வைத்திருந்த அனைத்துக் கற்பிதங்களும் தகர்ந்து தர்க்கத்திற்கு உள்ளாகிறது. புலன்களுக்கு அகப்படாதவரை எதோ ஒன்று நமக்கான வணக்கதிற்குறிய பொருளாக துதிபாடப்படுகிறது. அதுவே நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் வரும் போது அது தர்க்கத்திற்குள்ளாக்கப்பட்டு முற்றும் முடிய அலசி ஆராயப்படுகிறது.

Tuesday, November 21, 2017

மந்திரக்காரன் கார்சியா மார்க்கேஸ்



மந்திரக்காரன் கார்சியா மார்க்கேஸ்

இலக்கிய வாசிப்புக்கு இனி எதுவும் கிடையாது என்று சொன்னால் சந்தோசமாக தண்டனையை ஏற்றுக் கொள்வேன். One Hundred Years of Solitude முடிந்துவிட்டது. கண்களை மூடிக்கொண்டு கனவு உலகத்தில் மிதந்தது போன்று இருந்தது வாசிப்பு அனுபவம். மூன்று நாட்கள் விடுமுறை. மழைக்காலமும் தோதாகிவிட்டது. புற உலகம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. இரண்டாயிரத்து பதினான்கில் இதே போன்றதொரு அனுபவம். இடைவெளிவிடாமல் The Idiot ஒரு நீண்ட கனவாக நான்கு நாட்கள் தொடர்ந்தது. மிஷ்கினின் க்ளைமேக்ஸையும் புயேந்தியாக்களின் க்ளைமேக்ஸையும் இனி மறக்கவே முடியாது. மார்க்வேஸ் தன் கதைகளில் ஜாலங்கள் செய்யும் ஒரு மந்திரக்காரன். இந்த இரண்டு நாவல்களை இரசனையோடு வாசித்தேன் என்ற அனுபம் ஒன்றே போதும். இன்னும் ஒருமுறை இவ்விரண்டையும் தமிழ் மொழிபெயர்ப்பில் முயற்சி செய்ய வேண்டும்.

Sunday, November 5, 2017

Prey Searching White Birds

Prey Searching White Birds
One can see thousands of birds camped on the bog land of “*******”. They are very busy by looking down into the marsh land searching for something. They look like the one who had lost his precious diamond on the open ground. Almost for entire day they are in that constant search. When the day is gone they go back to their nests. But their search is only on this marsh land. They come here and start their duty everyday. No one knows when they are going to discover their lost diamond. For this alone they take a long journey for this unending pursuit.

Tuesday, October 17, 2017

இஞ்சி குஞ்சி இடியாப்பங்கள்: டர்ர்ர்ர் புர்ர்ர்ர் டமால்

Photo: Greenhouse gases
புரட்சியாகட்டும், கலகமாகட்டும் அது தனிமனிதன் சார்ந்த காரியம் அல்ல. ஒரு குழு கூடும்போது அதில் இருக்கும் ஒன்று அல்லது இரண்டு பேர்களுடைய தாக்கம்தான் அது. அவர்களுடைய ஆற்றலே முழு குழுவிற்குமான ஆற்றல். ஆரம்பிப்பது என்னவோ ஒரே ஒருவனிடத்தில் இருந்துதான் தொடங்குகிறது. பின்பு அது அனைவரையும் தொற்றிக் கொள்கிறது. இது தான் காலங்கள் தோறும் நடந்துவரும் புரட்சிகளின் நிதர்சனம். அந்த ஒரே ஒரு இயங்கு சக்தியை முடக்கிவிட்டால் முழு கூட்டத்தின் செயல்திரனும் ஸ்தம்பித்துவிடும். அந்த ஒற்றைப் புள்ளியை இனம் காணாமல் ஒரு பெரிய ஆற்றலை அணுகுவது காட்டுத்தீயை ஒரு வாளி தண்ணீரைக் கொண்டு அணைப்பதற்கு இணையானதாகும். இது ஆபத்தை விளைவிக்கும். ஒரு கூட்டத்தின் ஆற்றலை முடக்குவதற்கான வழி அதுவல்ல. கூட்டத்தில் ஒற்றையாக இருக்கும் மைய சக்தி அதுதான் மிக முக்கியம்.

Monday, September 18, 2017

விரியும் கனவுகளும், உருகும் மெழுகுச்சிறகுகளும்


அவனுக்கு மெழுகுச் சிறகுகள் கொடுக்கப்பட்டன. பறப்பதற்கான சுதந்திரம் அது. அதைக் கொண்டு எவ்வளவு அகலத்திற்கு வேண்டுமானாலும் அவன் பறக்கலாம். அதிக உயரம் மாத்திரம் கூடாது. எச்சரிப்பு அவன் தந்தையிடம் இருந்து வந்தது. செய்யாதே என்று சொல்லும் போதுதானே அதை செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது. அதுவே மனித இயல்பு. Icarus உயரத்தின் எல்லையை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் எச்சரிக்கையை தடையாகக் கருதாமல் தடையை விசாசலமான வாசலாகக் கருதி மெழுகு றெக்கைகளை படபடத்துக் கொண்டு மேல் நோக்கி இன்னும் அதிகம் இன்னும் அதிகமாக பறக்க ஆரம்பித்தான். கனவுகள் இன்னும் விரிய ஆரம்பித்தன. இன்னும் மேலும் மேலும் செல்ல உயர பறக்க ஆசை உந்தித் தள்ளியது. வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க மெழுகு வெப்பம் தாளாமல் உருக ஆரம்பித்துவிட்டது. சிறகுகள் உருகிக் கொண்டே அவன் பூமியின் மீது இறங்கிக் கொண்டிருந்தான்.
அவன் பூமியை நெருங்கும் போது பூமியின் குடிகள் அனைவரும் அந்த வீழ்ச்சியின் காட்சியை கண்டு கொண்டிருந்தனர். அன்று அந்த காட்சிக்கு பார்வையாகத கண்கள் எதுவும் கிடையாது. அவர்களுக்கு இருந்த ஒரே விசேஷித்தக் காட்சி அந்த வீழ்ச்சி மாத்திரமே. அந்த சம்பவத்தை என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் சம்பவமாக அவர்கள் கதையில் அமரத்துவம் பெற செய்தனர். மெழுகு சிறகுகளும், அவன் தந்தையின் அறிவுறுத்துதலும், அவனுடைய கீழ்படியாமையும் காலம் காலமாக அன்றிலிருந்து கதையாக மக்களுக்கு சொல்லப்பட்டு வந்தன.
Icarusன் கனவு இலட்சியத்தை நோக்கிய கனவு. அதுவே அவனுக்கு பெரிதாகப் பட்டது. அவன் மற்றவர்களைப் போல பூமியின் மீது ஊர்ந்து கொண்டிருக்க விருப்பம் இல்லை. தான் இருக்கும் பூமி அவனுக்கு பிடித்தமானதாக இல்லை. மற்றொரு உலகை கண்டடைய விரும்பினான். போதாமை இதுதான்: மெழுகுச் சிறகு அவனுடை இலட்சிய உலகத்திற்கு ஒருபோதும் அழைத்துச் செல்லவே செல்லாது. அவனுக்கு என்று எல்லை ஓன்றை அந்த மெழுகு அவனுக்கு நினைப்பூட்டிக் கொண்டே இருந்தது. “உன் கனவுகள் வானத்துக்கு ஏறுவதாக இருக்கலாம். என்னைக் கொண்டு நீ அதனை அடைய முடியாது. அதற்கு வேண்டியது அக்கினிச் சிறகுகள். முடிந்தால் அதனை நீ கண்டுபிடித்துக் கொள். அப்படியே நீ அதனை கண்டடைந்தாலும் அதனை தாக்கிக் கொள்ளும் ஆற்றல் உன் உடலுக்குக் கிடையாது. நீ இந்த பிரபஞ்சத்தில் ஒரு எல்லைக்குள் ஆட்பட்டவன் என்பதை நினைவில் கொள். என்னுடைய ஆற்றலே உன்னுடைய பயணத்தின் எல்லை. உன் கனவுகள் அல்ல. என்னுடைய ஆற்றலுக்கு ஏற்றவாறு உன் கனவுகளின் எல்லையை மட்டுப்படுத்திக் கொள். பத்தாம் வகுப்புத்தான் என் ஆற்றல் என்றால் அதோடு நிறுத்திக் கொள். பன்னிரெண்டு என்றால் அதுதான் உன்னுடைய எல்லையும் கூட. அதற்கு மீறி மருத்துவம் அது இது என கனவு காணாதே. உன்னிடம் இருப்பது அக்கினிச் சிறகுகள் அல்ல. மெழுகாகிய நான் தான். எல்லையை மீறினால் அதிகார வெப்பத்தை தாக்குபிடிக்க என்னால் முடியாது. உருகிவிடுவேன். நீ இறந்து போவாய்.”
அன்று Icarus வீழ்ச்சி இந்த முழு பூமியின் குடிகளுக்கே காட்சிப் பொருளாக இருந்தது. பண்டைய ஓவியம் ஒன்று இந்த வீழ்ச்சியை சித்திரப்படுத்துகிறது. அதில் உழவன் தன் ஏரை நிறுத்திவிட்டு அந்த காட்சியைக் காண்கிறான். கப்பலில் பயணிக்கும் மாலுமிகள் Icarus கடலில் வீழ்ந்து கிடக்கும் காட்சியைக் காண்கிறார்கள். முழு உலகமே ஸ்தம்பித்துப் போய் அவனையே உற்று நோக்கினர். அந்த இலட்சியவாதியின் வீழ்ச்சி அன்றைக்கு அனைவருக்குமான ஈர்ப்பு மற்றும் பேசு பொருள்.
இதே காட்சியை நவீன கலைஞன் ஒருவன் சித்திரப்படுத்துகிறான். முந்தைய ஓவியத்தின் மையாம் Icarus. நவீன ஓவியம் அந்த மையத்தை இல்லாமல் செய்துவிடுகிறது. பார்க்கிற நமக்கு ஒன்றும் விளங்கவில்லை. யாரோ ஒருவர் வந்து இந்த படம் Icarusன் வீழ்ச்சி என்று சொல்லுகிறார். நாமும் துணுக்குற்றவர்களாக எங்கே எங்கே என்று அவனை படத்தில் தேடிக் கொண்டிருக்கிறோம். Icarus என்ற மையமும் அவனுடைய வீழ்ச்சியும் கதையில் இல்பொருளாக்கப்படுகிறது. ஏன் இந்த கண் கட்டி வித்தை.
நம்முடைய பார்வைக்கு அந்த சிறிய பையனுடைய இருப்பு தெரிவதில்லை. அதற்கான முக்கியக் காரணம் ஓவியத்தின் பிரச்சனை, ஓவியத்திற்கு வெளியில் இருந்து பார்க்கும் நம்மிடம் இல்லை. அது ஓவியத்திற்கு உள்ளேயே இருக்கிறது. மையம் இல்லாமல் ஆனது ஓவியத்தில் இருக்கும் சுற்றுவட்டம் தன் செயல்பாட்டை சரிவர செய்யாததுதான். மையம் Icarus என்றால் சுற்றுவட்டம் உழவனும், மாலுமிகளும் ஆவர். அவர்கள் Icarusஐ பார்க்க வேண்டும். அவனைப் பார்த்து ஆச்சரியப்பட வேண்டும். நவீன ஓவியத்தில் இருக்கும் அந்த உழவனுக்கு அந்த வீழ்ச்சி பொருட்டே அல்ல. அவனுக்கு அவன் பிழைப்புதான் முக்கியம். கடலைப் பார்ப்பதற்கு பதில் தான் உழுவதிலேயே நோக்கமாக இருக்கிறான். உழவு மாட்டை இன்னும் கொஞ்சம் அதட்டி உழவைத் தொடர்ந்தால் பொழுது சாய்வதற்குள் அந்த துண்டு நிலத்தையாவது முழுவதும் உழுது முடித்துவிடலாம். தேவையில்லாமல் யாரோ ஒருவனுடைய வீழ்ச்சியை ஏன் பார்க்க வேண்டும் அதைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்.

ஒரு Icarus விழுந்தால் பரவாயில்லை. எத்தனை வீழ்ச்சிகள். அனைத்து வீழ்ச்சிகளும் இலட்சியக் கனவின் வீழ்ச்சி என்று சொல்லிவிட முடியாதே. பேராசையில் ஒருவன் நான் வானத்துக்கு ஏறுவேன் என்று உயர சென்று விழுந்தான். பழத்தை புசிக்காதே என்று சொல்லியும் மற்றொருவன் அதை மீறி புசித்து சிங்காரத் தோட்டத்தில் இருந்து விழுந்தான். இந்த உலகம் எத்தனை வீழ்ச்சிகளை இருக்கிற வேலைகளை விட்டுவிட்டு பார்த்துக் கொண்டிருக்கும். நம் வேலையை பார்ப்போம். அக்கினிச்சிறகாம் அக்கினிச்சிறகு. அதை வைத்துக் கொண்டு கனவு வேறு காண வேண்டுமாம். இனி நம்மால் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. 

Thursday, August 17, 2017

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்

முகம் ஒன்றுதான் அது அத்தனை உணர்வுகளுக்குமான நாடக மேடையாக திகழ்கிறது. எத்தனை அடுக்குகளிலான உணர்வுகள் அதன் மீது அரங்கேற்றப்படுகின்றன. அத்தனைக்கும் அந்த முகம் உயிர் கொடுக்கிறது. அந்த அரங்கேற்ற மேடை மாத்திரம் இல்லை என்றால் அத்தனை உணர்வுகளுக்கும் உயிர் அற்று போய் விடும். கோபம் இப்படித்தான் இருக்கும் என அதனை தனியாகத் துண்டித்துக் காட்டக் கூடியவர் யார்? கனிவு என்பதை அதன் இருப்பில் தனியாகத் துண்டித்துக் காட்ட முடியுமா? இவைகள் அனைத்துக்கும் முகம் என்ற நாடக மேடை அவசியப்படுகிறது.
அனைத்து உணர்வுகளுக்குமான வெளியாக்கமாக முகம் இருப்பது இயல்பானது. அது அப்படித்தான் இருந்தாக வேண்டும். கோபம் வந்தால் உடனே அதனை வெளிப்படுத்தியாக வேண்டும். அன்பு என்றால் அதனையும் உடனே வெளிப்படுத்தியாக வேண்டும். இதில் ஒவ்வொருவரும் ஓவ்வொரு உணர்வை அதீதத்தில் வெளிக்காண்பிக்க பேர்போனவர்கள். அனைவரும் அனைத்து உணர்வுகளையும் சமச்சீர் விகிதத்தில் தங்கள் முகத்தில் திரையிடும் இயல்பு இல்லாதவர்கள்.
ஒரு மனிதனால் கோபம் கொள்ள மாத்திரமே தெரிந்திருக்குமாயின் அவனால் அதிகம் அன்பைக் காட்ட முடியாது. அப்படியே மீறி காட்டினாலும் அதுவே அபூர்வமானதாக ஆகிவிடும். எப்போதும் அன்பை மாத்திரமே பொழிகின்றவர்கள் திடீரென கோபத்தை வெளிப்படுத்தும் போது அது ஒருவராலும் தாங்கிக் கொள்ள முடியாத உள்ளக் குமுறலாகி விடுகிறது.
இயல்பில் ஒருவருக்கு ஒன்று இல்லாதபட்சத்தில் திடீர் என்று அவரிடம் அது தோன்றும் போது அந் நபரை இயல்பற்றவராக மாற்றிவிடுகிறது. அதுவும் அந்த இயல்பற்ற நிலை சிறிது நேரத்திற்கு மாத்திரமே. அச்சிறிது நேரமே மற்றவர்களுக்கு தாங்க முடியாத தருணமாக மாறிவிடுகிறது. இயல்பிற்கு உட்படாதது ஒன்று நீண்ட நேரத்திற்கு நீடிப்பதில்லை. இதில் அனைத்தும் நீண்ட நேரம் நீடிக்காவிட்டாலும் ஒன்றை மாத்திரமே காலத்திற்கும் நிலைத்திருக்கும்படி நாம் விரும்புகிறோம். அதனை என்றென்றைக்குமான ஒன்றாக வைத்துக் கொள்ள நாம் ஆசைப்படுகிறோம். அந்த ஒன்று அன்பு. அன்பு ஒன்றே என்றென்றைக்கும் இருக்கவேண்டும் என்று நாம் அசைப்படுகிறோம்.
இங்கு பிரச்சனை ஒன்று உள்ளது. அன்பை மாத்திரமே என்றைக்குமான ஒன்றாக நாம் உணர்ந்து அனுபவித்து வருகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அன்பைத் தவிர இங்கே வேறு ஒன்றும் இருக்கவில்லை என்றும் வைத்துக் கொள்வோம். நம்மால் அந்த தனித்து நிற்கும் ஒற்றை உணவர்வான ஒப்பற்ற அன்பை இதுதான் ”அன்பு” என்று நம்மால் முழுவதுமாக அதனை உணர்ந்து கொள்ள முடியுமா என்பதுவும் கேள்வி.
முடியாதுதான். அன்பு அதனை அதன் முழுமையில் வைத்துப் பார்க்க வேண்டும் எனில் நாம் அதில் இருந்து அதுவல்லாத ஒன்றான வேறு ஒன்றிற்கு கடந்து சென்று அந்த ஒப்பற்ற ஒற்றை உணர்வை அதுவல்லாத மற்றொன்றில் இருந்து அன்பை அதன் முழுமையில் பார்க்க வேண்டி இருக்கிறது. கோபம் என்ற மற்றொரு புள்ளியில் இருந்தே அன்பு என்ற முழுமையை நாம் பார்க்க முடியுமோ? அது இல்லாவிடில் அன்பின் முழுமையை நாம் கண்டு கொள்ளவே முடியாதோ எனவும் தோன்றுகிறது.
அதே நேரத்தில் அப்படி கோபம் என்ற மற்றொரு நிலைக்கு ஏன் செல்ல வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. பிரச்சனை இதுதான்: நாம் அன்பையே இலக்குப் பொருளாக வைத்து அதனை ஆய்வு செய்துவிடுகிறோம். நாம் ஒருபோதும் எதிர்மறை அம்சமான கோபத்தை அதனுடைய இருப்பில் ”இது தான் இது” என்று ஆய்வு செய்வதில்லை. கோபம் ஒன்று தனியாக ஒன்று இருக்கிறது என்று நாம் நம்புகிறோம். அதுவும் பிரச்சனையே.
உண்மையைச் சொல்லப்போனால் இந்த உலகத்தில் கடைசியில் எஞ்சி இருப்பது/இருக்கப்போவது அன்பு ஒன்று மாத்திரமே. அது மாத்திரமே என்றென்றைக்குமான எக்காலத்துக்குமான ஒன்றாக விளங்குகிறது. அதனைத் தவிர்த்து எதாகிலும் ஒன்று அன்பிற்கு போட்டியாக நிற்குமாயின் அதன் பிரச்சனை அன்பில் இல்லை. மாறாக போதாக்குறையாக ஒன்று அன்பில் குறைவுபடுகிறது. அன்பு குறைவுபடும் நிலையில் அந்த குறைவின் நிலைதான் நாம் கூறும் கோபம், காழ்புணர்ச்சி, வெறுப்பு மற்ற எல்லாம். இவைகள் அன்பின் ஏதோ ஒரு இல்லாத நிலைதான். இவர்கள் அன்பில் குறைவுபட்டவர்கள் மற்றும் இல்லதாவர்கள் ஆவர். இருப்பது ஒன்று மாத்திரமே அன்பு ஒன்றே.
ஒருவன் இவைகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்துக் காட்டும் திறன் அற்றவன் எனவும் சொல்லலாம். அன்பின் ஒருபகுதி குறைவு படும் நிலையில் அங்கே நிற்பது அதாவது அந்த போதாக்குறையின் பகுதிதான் ஒருவருக்கு வெறுப்பாகவும், காழ்ப்புணர்ச்சியாகவும், கபடமாகவும் மாற்றமடைகிறது.
ஒருவேளை ஒருவனுக்கு அன்பின் சாரமே உள்ளத்தில் இல்லாமல் போகும் எனக் கொள்வோம். அந்த நிலை? ஏற்கனவே சொன்னது போல முகம் ஒரு நாடக மேடையாக ஒன்றை மாத்திரமே காட்ட முடியும். அதுவும் அது அவனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருப்பதாகும். இப்போது அவன் மிக அரிதாக வெளிக்காண்பிக்கும் ஒன்றான அன்பும் இல்லாவிடில் அவனுடைய அந்த மற்ற குறைவுபாட்டின் உணவர்வுகள் அவனிடத்தில் இருக்கக் கூடுமா? அப்படி இருக்க முடியாதுதான். அது எதுவும் அற்ற ஒரு நிலை. ஒருவன் மனதில் அன்பின் ஈரம் முழுவதும் வற்றிவிட்ட நிலையில் அவன் முகத்திரை எதனை நாடகமாகக் காட்சியாக்கும்? அன்பும் கிடையாது, அதன் குறைவுபாடான மற்ற எந்த உணவர்வுகளும் கிடையாது. எதுவுமற்ற நிலை எது?

என்னைப் பொறுத்தவரையில் அது உணவர்களே அற்ற ஒரு முகமூடியை தன் முகத்தின் மீது பொருந்த்திக் கொள்வதைப் போன்றதாகும். அந்த முகமூடி சிரிப்பை மாத்திரமே நிரந்தரமாகக் காட்டுகிறது என வைத்துக் கொள்வோம். அந்த முக மூடியை உற்று நோக்கும் போது ஒரு வித ஏக்கம் அந்த சிரிப்பின் முகத்திற்கு பின்னால் இருக்கும். அந்த பரிதாபத்தில் ஒரு அன்பின் ஏக்கம் காணப்படுகிறது. அன்பு மிகுதியாக இருக்கும் பட்சத்தில் எப்படி அது மற்றவர்களை சந்தோஷப்படுத்துகிறதோ அதே போன்று அந்த அன்பு என்ற பிரவாகம் வற்றிய உள்ளதைப் முகமூடியில் பார்க்கும் போது இரக்கம் மேலிடிகிறது.

Monday, August 14, 2017

மிஸ்ட்டர் பேனா அமுக்கி


சென்ற வாரம் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் இருந்து கடிதம் ஒன்று வந்தது. என் வாழ்நாளில் இதுதான் எனக்கு வந்த முதல் கடிதம். அதாவது நீல நிற Inland letterல். ஆவலோடு பிரித்து வாசிக்க ஆரம்பித்தேன். வாசிப்பின் தொடர்ச்சியில் என்னை பயம் கவ்விக் கொள்ள ஆரம்பித்தது. அது ஒரு விமர்சனக் கடிதம். நான் எழுதிய “கூப்பிடுக்கள் புதுமைப்பித்தனை” கட்டுரைக்கான எதிர்வினை அது. கிழித்து தொங்கபோட்டுவிட்டார். எழுதிய கடிதத்தை அப்படியே என்னுடைய பிலாக்கில் பதிவிடும்படி உத்தரவும் போட்டுவிட்டார். சில வசவுகளை மாத்திரம் நீக்கிவிடுகிறேன் என்ற கோரிக்கைக்கு சம்மதம் தெறிவித்துக் கொண்டார். கடித்தத்தில் வந்த எதிர்வினை இதுதான்.

மிஸ்ட்டர் பேனா அமுக்கி,
விலை உயர்ந்த அந்த காமா பேனா அதிகம் இன்க் பிடிக்கும் என்பதால் கண்டமேனிக்கு எழுதுவதை தவிர்த்தல் நலமாக இருக்கும். பேசும்போது நாவடக்கம் எவ்வளவு அவசியாமோ அதே அளவிற்கு பேனாவைக் கையாளும்போதும் அதிகம் அவசியம். தர்க்கம் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. “கொசுக்களை வடிகட்டி ஒட்டகத்தை விட்டுவிடுகிறீகள்”. நான் ஒட்டகம் என்று சொன்னது வணிக இலக்கியத்தைப் பற்றினது. கொசுக்கள் என்று சொன்னது சீரியஸ் இலக்கியத்தைப் பற்றியது. சு ரா எங்கே அந்த வணிக எழுத்தாளர்கள் எங்கே. தமிழ் இலக்கியத்தைப் பற்றி பேசும்போது அதனை தமிழ் இலக்கிய விமர்சன பின்னணியில் வைத்துமட்டுமே விவாதிக்க வேண்டும். ஒருபோதும் நீங்கள் வரம்பை மீறி இங்கு உள்ள நவீன தமிழ் இலக்கியத்தைப் பற்றி விவாதிக்கும் போது மேல் நாட்டு இலக்கிய விமர்சனங்களை சண்டைக்கு இழுக்கக் கூடாது. இது ஆய்வு நெறிமுறை பிறழ்வு. நீங்கள் குறிப்பிட்ட கா. நா. சு வே ஒருபோதும் தன்னுடைய நவீன தமிழ் இலக்கிய விமர்சனத்திற்கு மேல் நாட்டு விமர்சனத்தையோ கோட்பாட்டையோ கையாண்டது கிடையாது. அந்தந்த பண்பட்டிற்கென்று அதற்கான அரசியல் இருக்கிறது. இதில் அங்குள்ள ஒன்றை இங்குக் கொண்டுவந்து முடிச்சு போடக் கூடாது. இருப்பினும் உங்களுடைய விவாதத்தை அதிகம் ரசித்தேன்.
இன்னொன்றையும் நீங்கள் அதிகம் கவனத்தில் கொள்ள வேண்டும். இலக்கியம் என்பது உன்னத சிந்தனையில் இருந்து பீரிட்டு வெளிப்படும் பிரவாகம் என்பார்கள். இதுதான் நம்முடைய நம்பிக்கையும் கூட. நம்முடைய தமிழ் இலக்கியத்தில் இதை நீங்கள் பார்ப்பீர்களானால் சிந்தனை எவ்வளவு செறிவானதாக இருக்கிறதொ அந்த அளவிற்கு அவர்களுடைய வாழ்க்கையும் இருக்கும் என நம்பலாம். அதிலும் சிலருடையதை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது.
எது எப்படி இருந்தாலும் நம் நம்பிக்கையான உன்னத சிந்தனை மற்றும் அதில் இருந்து வரும் இலக்கியம் என்பதை அந்த சிந்தனையாளனுடைய வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது வாழ்க்கை மிகவும் மோசமானதாகத்தான் இருக்கும். உங்கள் கட்டுரையில் ஹெம்மிங்வே ஹெம்மிங்வே என்று மூச்சு முட்ட கத்துகிறீர்களே அவருடைய வாழ்க்கையில் அவர் என்ன அவ்வளவு ஒழுக்கவாதியா?. ஓரினச்சேர்க்கைக்காரர்தானே அவர்? ஒழுக்கம் ஒழுக்கமின்மை என்ற வரையறைக்கும் மீறி Sodomi என்று சொல்வார்களே அப்படிப்பட்டவர்கள் தானே இந்த ஐரோப்பிய இலக்கியவாதிகள் மற்றும் சிந்தனைவாதிகள்.
கேரக்ட்டரே சரியில்லை என்னும் போது அவர்கள் சிந்தனை மாத்திரம் உன்னதமாக இருந்து கொண்டாடுவது எவ்வளவு அபத்தமானது. அந்த ஹேம்மிங்வேவினின் ஒழுக்க சீலத்தோடு நீங்கள் சொன்ன சேசை சற்று ஒப்பிட்டுப் பாருங்கள். அதில் சேஸ் ஒழுக்கத்தின் சிகரமாகக் கூட இருக்கலாம். ஒழுக்கமாக இருப்பது என்பது வேறு உன்னதமான எண்ணங்களைக் கொண்டிருப்பது வேறு. ஏன் சுஜாதாவை எடுத்துக் கொள்ளுங்கள் நிச்சயமாக அவர் ஒழுக்க சீலர். மறுப்பேதும் இருக்க முடியாது. ஆனால் அவர் கதைகளில் சற்று மசாலா துக்கலாகத்தானே இருக்கிறது.
இந்தவகையில் உங்களுடைய கட்டுரை ஒரு இலக்கிய வடிகட்டி என்ற வகையில் ஒரு பெரிய ஒட்டகத்தையே நிறுத்தாமல் விட்டுவிட்டது. அதற்கு பதிலாக தேவையில்லாத சிறிய கொசுக்களை பூதமாகக் காட்டி அவைகளை ஒரு பொருட்டாகக் கருதி வடிகட்டியிருக்கிறது. நல்லா எழுதினீங்க போங்க கட்டுரையை. எழுதும் போது பக்குவம் பார்த்து எழுத வேண்டாமா?
மிக காட்டத்துடன் எழுதிக்கொள்ளும் உங்கள் நலம்விரும்பி

********

Saturday, July 15, 2017

ஒழுக்கம் என்னும் ஒற்றைக் கோடு


சாராயம் அருந்தாத ஐந்து பேரை கிராமங்களில் பார்ப்பது அரிது. மதுவுக்கு அடிமையானவர்கள்/ஆகாதவர்கள் என்று வேறு பிரித்து வைத்து பார்க்கிறோம். இதனை அதிகம் ஒழுக்கத்தோடு தொடர்புப்படுத்தி பார்த்துவிட்டோம். ஐந்து பேர் மாத்திரம் சாராயம் குடித்துவிட்டு மற்ற ஆண்கள் அனைவருமே யோக்கியர்களாக இருந்தால் அந்த ஐந்து பேரை ஒழுக்கத்தின் சாட்டையால் தண்டித்துவிடலாம். இப்போது பிரச்சனை ஐந்து பேர் யோக்கியர்களாகவும் மற்ற அனைத்து கிராமத்தார்கள் குடிகாரர்களாகவும் இருப்பது நம்மை யோசிக்க வைக்கிறது. அந்த ஐந்து பேரைக் கொண்ட குழு இயல்பானதா? அல்லது ஊர் முழுக்க குடிகாரர்களாக இருப்பது இயல்பானதா? என்பதும் கேள்வியே.
இந்தக் கேள்வி என் சிறுவயதுமுதல் கேள்வியாக இல்லாமல் ஒருவித குழப்பமாகவே இருந்து வந்திருக்கிறது. அந்த ஐந்து பேர் மாத்திரம் ஏன் விதிவிலக்காக இருக்கிறார்கள் என்பதுவும் ஆச்சரியமூட்டுகிறது. அவ்வளவு சுய கட்டுப்பாடு கொண்டவர்களா அந்த ஐந்து பேர்கள்? இமயம் தன்னுடைய சிறுகதை ஒன்றில் “ஏன் எங்கள் தெரு பெண்களுக்கு மாத்திரம் பேய் பிடிக்கிறது?” என்ற கேள்வியைக் கேட்பார். அதே கேள்வியை நானும் “ஏன் அந்த ஐந்து பேரைத் தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் குடிகாரர்களாக இருக்கிறார்கள் என்பதுதான்.
இன்று போரும் வாழ்வும் படித்துக் கொண்டிருக்கும் போது அதற்கான விடை கிடைத்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. இது முழுக்க முழுக்க அஃக்மார்க் பதில் என்று இல்லாமல் இருந்தாலும் எதோ ஒருவித்ததில் ஏற்புடையதாக இருந்தது. மனதிற்குள் சரியான பதில்தான் என்பது போன்று தோன்றியது. எனினும் இதனை பொதுவெளிக்கான பதில் என்று கொள்ள முடியாது.
இளவரசர் ஆன்ருவும், கோமகன் பீயரும் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள் (முக்கிய பாத்திரங்கள்). பீயர் அடிமைகளை விடுதலையாக்க வேண்டும் என்றும் அதிகம் வேலைபளு அவர்கள் மீது சுமத்தக் கூடாது என்றும் சொல்லுகிறார். பீயருக்கு முழு அடிமைகளும் உழைக்கும் மக்களும் அவர்கள் துன்பத்தில் இருந்து விடுதலையாக வேண்டும் என்று ஆசைபடுகிறார். ஆன்ருவோ அதற்கு எதிரிடையான ஒரு கருத்தை முன்வைக்கிறார். ஆன்ருவின் கண்ணோட்டத்தில் அடிமைகள், உழைப்பாளிகள் என்று வேறுபிரித்து அவர்கள் பாவப்பட்டவர்கள் என்று பார்க்கும் புதியதொரு பார்வை கிடையாது. அவருடைய வாழ்க்கையும் இன்னும் நாவலில் சிறிது நேரத்தில் முடிவடையப்போகிறது. அவருடையக் கருத்து மிக முக்கியமானதாகவும் நமக்குத் தோன்றுகிறது.
உழைக்கும் ஒரு விவசாயிக்கு அவனுடைய இன்பமே அவனது உடலில் இருக்கும் மிருக பலம். எவ்வளவுக்கு எவ்வளவு அவன் கடுமையான வேலையில் ஈடுபடுகிறானோ அது அவனுக்கு இன்பத்தை அளிக்கிறது. அவனுக்கு எதிரிடையில் யோசிக்கும் கூட்டம் ஒன்று இருக்கிறது. அவர்களுக்கு யோசிப்பது ஒன்றே இன்பம். நாள் முழுக்கவும் அவர்களால் யோசித்துக் கொண்டே இருக்க முடியும். அதில் இருந்து அவர்கள் ஏதோ ஒரு திட்டத்தையோ வேலையையோ அறுவடை செய்துவிடுகிறார்கள். இதே செயலை விவசாயிடம் விட்டால் அவரால் ஒரு நிமிடம் கூட தன் மண்டையை யோசனைக்கு கொடுக்கமாட்டார். யோசனைக்காக அவருடைய மனது பக்குவப்படவில்லை. மாறாக அவர் முழுக்க முழுக்க தன் ஆற்றல் அனைத்தையும் தன் உடல் உழைப்பிற்கே கொடுத்துவிடுகிறார். மனதிற்கான வேலை என்று வரும் போது அவரால் அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் போகிறது. நாள் முழுவதும் உழைத்துவிட்டு இருக்கும் மிச்ச நேரம் யோசனைக்கனதாக மாறிவிடுகிறது. ஒருவேளை அந்த இடைவெளியில் ஒரு வெற்றிடம் கூட ஏற்பட்டிருக்கலாம். அந்த வெற்றிடத்திற்கான ஒரு நிரப்புதல் அவருக்கு எதுவும் இல்லாமல் போகிறது. இந்த இடைவெளியும் மிகக் குறைந்த நேரத்திலானது. அந்த குறைந்த நேரத்தை அவர் யோசனைக்கான நேரமாக மாற்றாமல் யோசிக்கும் தன் மனதை மந்தமடைய செய்யவேண்டியிருக்கிறது. இதன் காரணமாகவே அவர் மதுவைக் கொண்டு தன் நினைவைச் செயலிழக்கச் செய்ய வேண்டியிருக்கிறது.
இதுவே அதிகம் யோசிக்கும் கூட்டத்திற்கு அவசியம் அற்றதாகப் போய்விடுகிறது காரணம் அவர்கள் தக்களுடைய இன்பத்தை யோசனையில் கழித்து விடுகிறார்கள். தத்துவவாதிகள்தான் இதில் கைதேர்ந்தவர்கள் போலும். அவர்கள் மனது இருபத்து நான்கு மணி நேரத்திற்கும் யோசனைக்கே பழக்கப்பட்டிருக்கிறது.
இதில் இந்த விவசாயிகள் மாத்திரம் மாட்டிக்கொள்கிறார்கள். ஒழுக்கம் என்ற ஒற்றை கோடு அவர்களை குடிகாரர்கள் என்று ஒழுக்கமின்மையின் பக்கம் தள்ளிவிடுகிறது. சாராயம் இவர்களுக்கு இன்றியமையாத வஸ்துவாக மாறிவிடுகிறது. இது வெறுமனே போதைக்கானது கிடையாது. இது முற்று முடிய தன் மூளையை அந்த யோசனை என்னும் அச்சுறுத்தும் அசுரனுக்கு அடிமையாக்காமல் இருப்பதற்காகவே. இவர்கள் கால் மணிநேரமாவது தங்கள் மண்டையை யோசனைக்கு கொடுத்தாலும் விளைவு தற்கொலையாக இருக்குமோ என்று தோன்றுகிறது. இவர்கள் யோசிக்க திரணற்றவர்கள். அதற்கு மாறாக தங்கள் உடல் முழுவதையும் உழைப்பிற்காக பழக்கப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இதற்கு நேரிடையில் நகரம் சார் ஆண்கள் தங்கள் மனதை யோசனைக்காக தயார்படுத்தி வைத்திருக்கின்றனர். யோசிப்பது ஒன்றுதான் நகரத்தாரின் ஒரே வேலை. அதற்கு அவர்கள் பயன்படுத்தும் ஒரே ஒரு உடல் உறுப்பு மூளை. கிராமத்தானுக்கு முழு உடலும் உழைப்பிற்கான மூலதனம் அதில் மூளை  மாத்திரம் செயலற்று போகிறது. நகரத்தார்களுக்கோ முழு உடலைத்தவிர மூளை மாத்திரமே உழைப்பிற்கான முலதனமாக இருக்கிறது.
இதில் நகரத்தானை கிராமத்தான் போன்று கடின உழைப்பில் ஆழ்த்தினால் அவன் இறந்துவிடுவான். கிராமத்தானை நகரத்தான் போன்று எதையும் செய்யாமல் சும்மா யோசிக்க விட்டால் அவனும் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிடுவான். அப்படி எதுவும் அசம்பாவிதம் நிகழாவிட்டாலும் அவன் உடல் ஊதி பருமனாகிவிடுவான். இந்த இரண்டு துருவ வாழ்க்கையை நம்மால் மாற்றியமைக்கவே முடியாதுபோலும்.

Wednesday, June 21, 2017

Into this Silence of Watching


Into this Silence of Watching
In my present reading of War and Peace there is a new perspective of life. I could see it through two insignificant characters.  One is the eight year-old boy and the other is a very old man. One is Natasha’s brother, heroine of the story, and the other one is the hero's (Prince Andrew) father. Tolstoy has knitted these characters into the novel in such fine fabric. They finely go along with the main texture of the novel. They cannot be removed from the larger texture. If these two threads are removed from the complete texture then it will unweave the whole fabric.

Thursday, June 8, 2017

உசிலம்பட்டி காற்றாலையும், உள்ளூர் குயிக்சாட்டுகளும்


கள்ளிப்பட்டியானால் என்ன? காற்றாலைகளே இல்லாத உசிலம்பட்டியானால் என்ன? நம்முடைய கட்டுரையின் கருவின் கட்டாயத்திற்காக புனைவிற்காகவாவது ஒரே ஒரு காற்றாலையை நம்முடைய அசகாய வீரனுக்காக தற்காலிகமாக அங்கே நட்டுவைப்போமாக.   
ஒரே ஒரு முறை புனைவில் ஒரு சாகச வீரன் அரக்கர்களை வீழ்த்த முயன்று தோற்று போனான். அந்த தோல்விதான் புனைவை யதார்த்தமாக்கியது. ஒருவேளை அவன் அந்த அரக்கர்களை அழித்திருந்தால் அவன் ஏறக்குறைய ஐநூறு நூற்றாண்டுகளுக்கு ஞாபகத்தில் இல்லாமல் போய் இருப்பான். அவனுடைய வெற்றி கற்பனைக்கதையாக வாசிக்கப்பட்டு என்றோ மறக்கப்பட்டிருந்திருக்கும். அவனுடைய தோல்வியும் அவனுடைய பார்வையில் இருந்த மாய வித்தையும் அவனை கோமாளியாக என்றென்றைக்கும் நம் நினைவில் வைக்க வேண்டிய கட்டாயமாகிவிட்டது. காலம் காலமாக இருந்து வந்த அந்த சாகச வீரம் அசட்டுத்தனமாக்கப்பட்டுவிட்டது. இதையெல்லாம் ஏற்படுத்தியது அந்த படைப்பாளியின் கதையாடல். அதுவரையில் என்றும் இல்லாத ஒரு கதையாடலையும் கதையையும் வைத்துவிட்டுப் போய் விட்டான். அது தன்னில் இன்றும் தனித்துவமாக நிலைநின்று கொண்டிருக்கிறது.

Friday, June 2, 2017

Four Legs Good Two Legs Bad


Four Legs Good Two Legs Bad
I was reaching Velachary station. The speaker in the train announces that the station is the last one and requests the passengers to get down from the train. Such monotonous tone always irritates the passengers from station to station. Our professor often curses that female voice with an unparliamentarily word "*****". Now the question is what is special in it to speak about this incident in this essay? What is special in that announcement to register it in words? Yes, there is something special about my reaching Velachary and that ***** *****’s voice. The latter one is very less in significance. But the first one carries historical significance.

Thursday, June 1, 2017

Piercing through the Wind


Nostalgic feelings of the nursery rhyme gush to one’s memory whilst the eye gazes at the night sky.  The floating pristine disc invites a dark man from Tamil Nadu, to sing the ever tiding "Nila Nila Odi Va". Rational faculties constantly fall short in studying this moment. Tales and songs usher one to cherish this unforgettable experience. Yet, trained culture merely reasons out ignoring nature. Culture of the learned demands only scientific observation of the starry night. 

Thursday, May 25, 2017

அறிதலே அதிகாரத்தின் ஆரம்பம்


ஒரு பொருளை அதன் பௌதிக நிலையில் வைத்து அதனை விளங்கிக் கொள்ள முடியுமா என்பது சந்தேகமாக இருக்கிறாது. முதலில் அதனைப் பார்க்கிறோம், பின்பு அதனை மனதில் இருத்திக் கொள்கிறோம். இவ்வளவுக்கும் பிறகு அதனைக் கற்றல் என்ற அவசியம் ஏன் தேவைப்படுகிறது? ஒரு பொருளை, அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், பார்த்து அதனை மனதில் பதிய வைத்துக் கொண்டால் மாத்திரம் போதாதா? அதற்கும் மேல் சென்று ஏன் அதனை ஒரு பெயர் இட்டு படிக்கிறோம். இப்பிரபஞ்ச வெளியில் இருக்கும் அனைத்தையும் நாம் படித்தாக வேண்டுமா? படித்தல் மூலமாகத்தான் நாம் இவ்வுலகத்தையே அறிகிறோமோ? அப்படியெனின் அந்த அறிதல் என்பதுதான் என்ன?

Saturday, May 6, 2017

நியூட்டனியத் தருணம்


நியூட்டன் பலமுறை அந்த மரத்தடிக்கு சென்றிருக்கலாம். அங்கு பழங்கள் விழுவது அவரது எண்ணங்களை ஈர்க்காமல் இருந்திருக்கலாம். அவருடைய கவனமும் அவைகள் மீது செலுத்தப்படாமல் இருந்திருக்கலாம். அந்த ஒரு நாள் மாத்திரம் சூழ்நிலை முற்றிலும் ஒருமித்து ஒரு மாபெரும் புதிய கண்டுபிடிப்பிற்கான தருணமாக அமைந்துவிட்டது. அது ஒரு கண்டுபிடிப்பிற்கானத் தருணம். இப்படித்தான் சொல்லியாக வேண்டும். அந்த ஒரு பொறிதட்டல்தான் ஒரு யுகத்திற்கான மாபெரும் கண்டுபிடிப்பை சாத்தியமாக்கியது. அதனையே மக்கள் நம்பவும் ஆரம்பித்தனர். இது போன்று ஒரு தருணத்தை என்னுடைய ஆய்வேட்டை பிரிண்ட் எடுத்து பைண்டிங் செய்ய பெல்ஸ் ரோட்டில் காம்லக்ஸ் ஒன்றிற்கு சென்றபோது ஏற்பட்டது. அது ஒரு நியூட்டனியத் தருணம் என்று சொல்லிக் கொள்ள முடியாவிட்டாலும் அது ஒரு அகவிழி திறந்தத் தருணம் என்றாவது சொல்லலாம்.

திருநெல்வேலியும், திருவல்லிக்கேணியும்


திருவல்லிக்கேணியில் ஒரு உயர்தர சைவ ஓட்டலில் அமர்ந்து கொண்டு புரட்சியைப் பற்றியும் பசியைப் பற்றியும் ஒருவன் சிந்தித்தால் அது எப்படிப்பட்ட புரட்சி சிந்தனையாக இருக்கும். பசியைப் பற்றி பேசுவதென்றால் பசியில் வாடும் மக்களை நேரில் சென்று பார்க்க வேண்டும் உள்ளம் பதபதைக்க வேண்டும். அதன் பின்பு பேனா முனை கூர்மையாக வேண்டும். ஆனாலும் பேனா முனை அதன் குமிழியில் இருக்கும் மையை இது போன்ற சைவ ஓட்டல்களில் உடகார்ந்தால்தான் மையை சீராக வெளியேற்றுவேன் என்று அடம் பிடிக்கிறது. உண்மையில் அது பேனாவின் பிடிவாதம் கிடையாது, சிந்தனையின் பிடிவாதம். என்னை நானே குற்றப்படுத்திக் கொள்ள முடியாது அல்லவா? அதனால்தான் முழுப் பழியையும் அந்த அய்யோப் பாவம் பேனாவின் மீது போட்டுவிட்டேன். எனக்காக அந்த உயிர் அற்ற ஜடம் பழி ஏற்றுக் கொண்டால் அதற்கு மனம் வலிக்கவா போகிறது. வீச்சரிவாளை விட தனக்குத்தான் சக்தி அதிகம் என்று பெருமைப் பட்டுக் கொள்கிறார் அல்லவா? இதையும் சற்று சுமந்து திரியட்டும். அழட்டும் நன்றாக அழட்டும்.

ஆள் பாதி ஆடை பாதி



நம்ம ஊர்க்காரர்கள் டை கட்டுவது பார்ப்பதற்கே மிகவும் வேடிக்கையான காட்சி. நமக்கு கச்சிதமானது கதர் சட்டையும் வேட்டியும்தான். மிக எடுப்பான உடைகள். சில காலங்களுக்கு முன்பு கோட்டை மாட்டிக் கொண்டு இடுப்பில் வேட்டியை கட்டிக் கொண்டிருந்தார்கள். அந்த முட்டை போண்டா மாதிரியான தொப்பை உடலுக்கு கோட் என்பது மிகவும் வேடிக்கையான உடைதான். இதையெல்லாம் நமக்கு யார் கற்றுக் கொடுத்தார்கள் என்பதுதான் இன்னும் புரியவே இல்லை. இன்றைய சில வாலிபர்கள் கோட்டை அணிந்துக் கொண்டு டை கட்ட மறந்து விடுகிறார்கள். எப்படியோ மேலை நாட்டு நாகரீகம் நமக்கு முற்றிலும் ஒத்து வருவதற்கு மறுக்கிறது. அந்த உடை நாகரிகத்தைச் சரியாக கடைபிடிப்பவர்கள் சேல்ஸ் ரெப்ரெசென்டேட்டிவ்ஸ் என்றே நினைக்கிறேன். அதுகூட தூரத்தில் இருந்து பார்க்கும் போது மாத்திரம் தான் மிக நாகரீகத் தோற்றத்தைக் கொடுக்கிறது. மிக அருகில் சென்று பார்க்கும் போது பாவம் விதியே என்று இந்த உடையை அணிந்து கொள்கிறார்கள் போலும் என்ற இரக்கம் மேலிட ஆரம்பித்துவிடுகிறது. பேண்ட் இல்லாதக் கோட்டும், டை இல்லாத கோட்டும், முடிவாக கோட்டே இல்லாமல் வெறும் சட்டையின் மீது டை கட்டிய நாகரீகமும் ஏதோ ஒன்றை சொல்ல வருகிறது. அதிகாரம் நம் மீது அதீதத்தில் திணிக்கப்பட்டு அசௌகரியத்துக்காக எதிர்ப்பைக் காட்ட வேண்டுமே என்பதன் பேரில் கோட்டு சூட்டுக்கான உடைகளில் ஒன்றை நிராகரித்து புரட்சியைக் காட்டி விடுகிறோம். இருப்பினும் நீ எதையாவது மாட்டிக் கொண்டே ஆக வேண்டும் என்னும் அதிகாரத்தில் அதையும் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறது. நோக்கம் இதுதான். இந்த மேல் நாட்டு உடையில் எதாவது இரண்டு அம்சங்களாவது நம் உடல் மீது இருந்தாக வேண்டும்.

Friday, March 10, 2017

நெப்(போலியனின்) கைக்குட்டை

போரும் வாழ்வும் நாவலில் ஓரிடத்தில் டால்ஸ்டாய் நெப்போலியனைப் பற்றி இவ்வாறு சொல்லுவார் “ அவன் உள்ளுக்குள் ஒரு இத்தாலியன், வெளிப்பாவனையில் ஒரு பெரென்சுக்காரன்” என்று. அத்தனையும் நடிப்பு. உண்மைத்தன்மை என்று எதுவும் அவனிடத்தில் கிடையாது. அது இருக்கட்டும். அந்த நெப்போலியனைப் பற்றி இப்போது நமக்கு என்ன கவலை என்று கேள்வி எழலாம். இப்போது நூறு ஆண்டுகளுக்கு முன் சர்வாதிகாரியாக வாழ்ந்த நெப்போலியனைப் பற்றி யார் கவலைப் படப்போகிறார்கள். ஹிட்லர் என்றால் கூடப் பரவாயில்லை. நமக்கு இங்கு முக்கியமாகப்படுவது டால்ஸ்டாய் காட்டும் நெப்போலியன்தான். நாவலில் நாவலாசிரியன் காட்டும் ஒரு மனிதன் நிஜத்தைக் காட்டிலும் தத்ரூபமானவன். நெப்போலியனை அநேகர் புகழ்ந்துதான் கேள்விப்பட்டிருக்கிறோம். அனால் போரும் வாழ்வும் மாத்திரம்தான் நெப்போலியன் என்றால் யார் என்று மிக அருகில் நம்மை அழைத்துக் கொண்டு போய்க் காண்பிக்கிறது. நாம் கேட்டறிந்த நெப்போலியன் வரலாறு கட்டமைத்த நெப்போலியன். அதில் தகவல்கள் மாத்திரம் அதிகமே தவிர உண்மைக்கு எந்த இடமும் கிடையாது.

Thursday, March 9, 2017

காவியமான ஆனைச் சாத்தான்


கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே

   கரிச்சான் குருவிகளை அதிகம் என் ஊரில் பார்த்திருக்கிறேன். வித்தியாசமான நேரங்களில் வித்தியாசமான பாதிப்புகளை அவை என்னுள் ஏற்படுத்தியிருக்கின்றன. இரட்டைவால் குருவி என்பதும் இவர்களுடைய மற்றொரு பெயர். இரட்டைவால் குருவியைக் காகத்துடன் ஒப்பிடும் போது அவ்வளவு ஒன்றும் பெரிய உருவம் கிடையாது. மிகச்சிறிய உருவம்தான் இந்தக் கரிச்சான் குருவி. வெளிநாட்டவர்கள் இங்கு வந்தால் காகம் என்றுதான் அழைப்பார்கள் போலும். அதன் உடலுக்கு அழகே அந்த வால்தான். நீண்டு கடைசியில் இரண்டாக பிளவுபட்டு இருக்கும். அதனாலேயே இரட்டைவால் குருவி என்று பெயரோ என்னவோ. மற்றபடி வால் சிறுத்திருந்தால் இவரையும் சிறிய காகம் என்றுதான் அழைப்பார்கள். காகம் என்றால் கூட சற்று சாம்பல் நிறம் கழுத்தில் பூத்திருக்கும். அண்டங்காக்கையென்றால் கருப்பா பயங்கரமா இருக்கும். அதீதக் கருப்பும் கருப்பல்ல. சாம்பல் பூத்த கருப்பும் கருப்பல்ல. கரிச்சான் குருவிகளின் நிறம்தான் கருப்புக்கு சிறந்த உதாரணம். அதனாலேயே இவர்கள் கரிச்சான் குருவி என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களுடைய பெயர் ஆயர்பாடி பெண்கள் மத்தியில் பெரும் கீர்த்திப் பெற்ற பெயர்.

Monday, March 6, 2017

குஞ்சிதபாதத்தின் பூர்வாங்கம்: சில கிசு கிசுக்கள்

குஞ்சிதபாதத்தை அடிக்கடி சந்தித்துவருகிற நமக்கு அவருடைய பூர்வாங்கத்தைப் பற்றி ஒன்றும் தெளிவாகத் தெரியாது. தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியமும் நமக்கு இல்லை. அதனால் அப்படியே விட்டுவிட முடியாது இல்லையா? ஒரு மகா புருஷன், அதுவும் கதையின் நாயகன். ஆரம்பம் என்று இல்லாமலா பொய் விடும்? யார் இந்த பூமியில் சுயம்புவாக இருந்திருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் ஆதியும் முடிவும் இருந்தாக வேண்டுமே. நம்முடைய குஞ்சிதபாதம் மாத்திரம் விதிவிலக்கா என்ன! அவனும் சொற்ப ஆயுள் கொண்ட அற்பப் பிறவிதானே. எனினும் எப்போதும் அரித்தெடுக்கிற நம்முடைய துருதுரு மண்டைக்கு அவனைப் பற்றி சில தகவல்களைத் தீனிபோட வேண்டியிருக்கிறது. தீர்மாணமான தகவல்கள் ஏதும் கிடைக்காவிட்டாலும் எதாவது ’கிசு கிசு’வாவது நிச்சயம் இருந்தாக வேண்டும். உண்மைக்கு அடுத்து நாம் நம்பியிருக்கிற தார்மீகத் தகவல் கிசு கிசு மாத்திரம்தானே.

Wednesday, March 1, 2017

நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுத்தாளர் கட்டியங்காரனை சந்தித்தேன். உற்சாகத்தின் மிகுதியில் இருந்தார். நான் எதுவும் வாய் கொடுக்கவில்லை. ஏன் தேவையில்லாமல் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டும் என்று பக்திப் பழமாக அருகில் சென்று அமைதியாக அமர்ந்தேன். அவர்தான் முதலில் பேச வேண்டும். அதுவே நியதி. மெல்ல பேச்சை ஆரம்பித்தார். ஆறு மாதமாக ஒரு கதை கருவை மனதில் போட்டு ஊறவைத்திருந்தேன். இன்று ஏனோ தெரியவில்லை அதைப் பற்றிய ஒரு புதிய அதுவும் முழுமையான பார்வை கிடைத்தது. எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு கதையை எழுத முற்பட்டுவிட்டேன். ஒரே மூச்சாகக் கதையை எழுதி முடித்துவிட்டேன். எங்கும் எதுவும் கொடுக்காத பரமானந்த நிலை என்னுள் இப்போது நிலவுகிறது என்றார். டைட்டில் ”கோமாளிக் கூத்தன் பஃப்பூன்”. இந்தக் கதை புதுமைப்பித்தனின் ”கயிற்றரவு” கதைக்கு இணையான புகழை எனக்கு ஈட்டித்தரப்போகிறது பார். சரி, டைட்டில் எப்படி என்றார். அவர் பேசுவார் பதில் எதிர்பார்க்க மாட்டார். அது ஒரு பொருட்டே அல்ல. எனக்குள் சிரிப்பு வந்துவிட்டது. இந்தச் சாமியார்களுக்கும் சரி படைப்பாளிகளுக்கும் சரி பரமானந்த நிலை  என்றால் என்ன என்பது இன்றுவரை நமக்கு விளங்கியபாடில்லை. இரண்டும் ஒன்றா அல்லது வெவ்வேறா. மேலும், எப்போது பார்த்தாலும் தன்னைப் புதுமைப்பித்தனோடு ஒப்பிட்டுக்கொள்வதற்கு எப்படித்தான் இந்த மனுஷனுக்கு மனம் வருகிறதோ. இப்படியே விட்டால் இன்னும் சில நாட்களில் தன்னைத் தாஸ்தாவஸ்கியுடன் ஒப்பிட்டுக்கொள்ளவும் செய்வார். அதற்குள் நல்ல மனநல மருத்துவரைப் பார்த்தாக வேண்டும்.


Monday, February 27, 2017

மோட்சப் பயணம்



கிரேக்க புராணத்தில் செத்தவர்களின் ஆன்மாக்கள் ஒரு படகின் மூலமாக அடுத்த உலகத்திற்கு செல்வார்கள். படுகுக்காரனிடம் காசு கொடுக்க வேண்டும். பொருள் இலார்க்கு எவ்வுலகமும் கிடையாது என்பது உண்மைபோலும். இந்த மானிடப்பிறவிகளுக்கு மாத்திரம் ஏன்தான் இந்த சாபமோ. அனைத்தையும் காசு கொடுத்துதான் அனுபவிக்க வேண்டும். காசே அனைத்தையும் தீர்மாணிக்கும் காரணி. இறந்த பின்பு கூட காசு அவசிப்படுகிறது. நதிக்கு அப்புறம் இருக்கும் உலகம் எப்படிப்பட்டது என்பது நமக்கும் தெரியவில்லை. அங்கும் காசின் அதிகாரம் தானோ என்னவோ? யார் கண்டது. யாராவது அங்கிருந்து வந்து நமக்கு அந்த உலகத்தைப் பற்றி அறிவித்தால் நன்றாக இருக்கும். முன் கூட்டியே அந்த உலகத்துக்கு உண்டான கரன்சியை சம்பாதித்து வைத்துக் கொள்ளலாம். இந்த மானிடப் பிறவிகளுக்கு எதுவும் இலவசம் கிடையாது. கடைசிக் காசுவரைக்கும் குறைவின்றி செலுத்தித் தீர வேண்டும். காசு கிடக்கிறது காசு. அதற்கு எந்தப் பஞ்சமும் கிடையாது. அதனை அடைவதற்கு பலவழிகள், பல தந்திரங்கள் உள்ளன. என்னுடைய கவலையெல்லாம் நன்னெறி போதனைகள் கூட பணம் எப்படி சம்பாதிக்க வேண்டும் என்றுதான் சொல்கிறதே தவிற பணம் என்ற மையத்தை உடைக்கவில்லையே என்பதுதான்.

Sunday, February 19, 2017

வாசகசாலை

தனியாக நூலகம் செல்லும் போதெல்லாம் கண்ணைக் கட்டி யாருமற்ற தீவில் விடப்பட்டதைப் போன்ற மனநிலை இருக்கும். சுற்றிலும் வாசகர்கள் இருப்பார்கள் இருப்பினும் நாம் மாத்திரம் யாருமற்று இருப்பது போன்ற தனிமை நிலவும். அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு செல்லும் போது அப்படிப்பட்ட பயம் இருந்தாலும் கண்ணாடிச் சுவர்கள் ஓரளவிற்கு அந்த பயத்தை போக்கி விடும். வெளி உலகம் நம் கண் முன் ஒரு விஸ்தார நிலையில் காட்சியளிக்கும். நேற்றைய அனுபவம் முற்றிலும் வித்தியாசமானது. #வாசகசாலை ”தமிழ்ச் சிறுகதைகளின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்” வாராந்திர தொடர் நிகழ்வுகள் – நிகழ்வு 2 நேற்று அண்ணா நுலகத்தில் நடைபெற்றது. நிறைய நண்பர்கள் அறிமுகமானார்கள். தனிமையில் புத்தகமும் அதில் கிடைக்கப் பெறும் அறிவைக் காட்டிலும் அதனை நண்பர்கள் மத்தியில் அறிமுகப்படுத்திக் கொள்வது என்பது ஒரு இனிமையான அனுபவம். இதற்காக பெரும்பாலும் நண்பர்களுடனேயே நூலகம் செல்ல விரும்புவேன். நிறைய நேரங்களில் அப்படிப்பட்ட தருணங்கள் வாய்க்கப்பெறாது. அவை மிக அரிதானவை. நேற்று மாத்திரம் ஒரு முழு நூலகமே நட்பு சூழலில் எனக்கு மிக நெருக்கமாக இருந்ததை உணர்ந்தேன். யாரையும் எனக்கு முன்பின் தெரியாது. அனைவரும் கதைகளைப் பகிர்ந்துக் கொள்வதற்காக இணைக்கப்பட்டோம். ஒருவருடன் நட்பை சம்பாதிப்பதற்கு எனக்கு ஏறக்குறைய ஆறுமாதங்களாவது ஆகும். நேற்று மாத்திரம் அந்த இரண்டு மணி நேரத்தில் ஏதோ காலம் காலமாக நாண்பர்களாக பழகிய உணர்வு மற்றவர்களுடன் ஏற்பட்டது. இச்சமுகத்தில் மொழி, இனம், சாதி இவைகளை மீறி எதாகிலும் நம்மை ஒன்றிணைக்குமா என்பது சந்தேகம்தான். நம் அனைவரையும் இந்த வேறுபாடுகள் அனைத்தையும் நீக்கி ஒ்ன்றிணைக்கும் ஒரே மையப் புள்ளி இலக்கியம் மாத்திரமே என்பதை நண்பர் கார்த்திகேயன் கடைசியில் பேசியபோது மகிழ்ச்சியாக இருந்தது. கூட்டம் முடிந்தவுடன் அனைவருடைய முகத்திலும் ஒரு மனநிறைவின் சாயல் தென்பட்டது. beauty will save the world என்று சொல்லவது போன்று literature will unite the world என்று நான் இனி சொல்லிக் கொள்ளலாம்.

Sunday, February 12, 2017

அவரா நீங்க!



சிலருடைய ஆளுமையை அடையாளம் காண்பதற்கு நீண்ட நாட்கள் ஆகும். ஒருவேளை அது சாத்தியப் படாமல் கூடப் போய் விடும். ஒரு நபர் என்னதான் தன்னுடைய சிறந்ததை வெளிக்கொணர்ந்தாலும் நாம் ரசித்து விட்டு அப்படியே அவரை மறந்து விடுவோம். நீண்ட நாட்கள் நம் நினைவில் அவர் தங்குவதில்லை. அந்த நபர் நமக்கு மிகவும் இணக்காமானவராக மாற வேண்டும். அதுமுதற்கொண்டே நாம் அந்த நபரின் ஆளுமையை சரியாக அடையாளம் காண்கிறோம் என்று அர்த்தப்படும். அந்த வகையில் Sir. Anthony Hopkins என்னை மிக நீண்ட நாட்களுக்குப் பின்னரே அதிகம் யோசிக்க வைத்த ஒருவராக மாறினார். இவர் எனக்கு மிகவும் முக்கியமானவராகப் படுவது ஒரே ஒரு காரணத்தால் மாத்திரமே. இவரை நான் முதன் முதலில் பார்த்தது Silence Of The Lambs. அவர் வெளிப்படுத்திய ஒரு கதையின் பாத்திரம் மிகவும் பயப்பட வைக்கக் கூடியது. மிக நீண்ட தூரத்தில் வைத்துப் பார்த்து இரசிக்க வேண்டிய ஒருவர் போன்று திரைக் கதையில் காணப்படுவார். எதையும் தீர்மாணமாக சொல்ல முடியாத ஒரு முகம். அதில் இருந்து வரும் மொழிக்கு ஒரு வசிகரம் இருக்கும். எனினும் அது நம்மை எளிதில் அருகில் அனுமதிக்காது.

Thursday, February 9, 2017

”இது மிஷின் யுகம்”

”இது மிஷின் யுகம்”


இரண்டு மேற்கோள்களுக்கு மத்தியில் இருக்கும் சுதந்திரமே சுதந்திரம். கற்பனை வரட்சி ஏற்படும் காலத்தில் நல்ல தலைப்பிற்கு திண்டாடும் நேரங்களில் மேற்கோள்களின் உதவியைப் போன்று வேறெதுவும் இருக்க முடியாது. அப்படியே நமக்கு பிடித்த மேதை ஒருவரின் கதைக்/கட்டுரையின் தலைப்பை இரண்டு மேற்கோள்களின் மத்தியில் சிறைபிடித்துவிட்டால் கேள்வி கேட்க யாரும் கிடையாது. ஒருவேளை தலைப்புக்கு சொந்தக்காரரே வந்தாலும் வேலையப்பாருமையா என்று அதிகாரத்தோடு விரட்டியடித்துவிடலாம். தற்போது நமக்கு அந்தப் பிரச்சனையே கிடையாது. அந்த மனுஷன் கல்லைறையில் இருந்து எழுந்து வந்தாலும் ரெடியா இருக்கு MLA Hand Book. இடத்தை சுட்டிக்காட்டி விட்டு ”எல்லாம் சட்டப்படிதான் செய்யுறோம் என்று வாதிட வந்தவரை வாயடைத்து போகச் செய்துவிடலாம். இந்த மேற்கோள் என்பது ஒரு சொகுசு பேருந்து மாதிரி. தலைப்புக்கு சொந்தக்காரரே வந்து அதனிடமே புலம்பினாலும் வாயையே திறக்காது. அவ்வளவும் சொகுசு வாழ்க்கை. பிடித்து வைத்த பிள்ளையார் போன்று வாயைத் திறக்கவே திறக்காது. சரி, அந்த மேற்கோளாவது என்னுடையதா என்றால் அதுவும் கிடையாது. யார் வேண்டுமானாலும் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். இருப்பினும் பாருங்கள் அதனைத் தொட ஒரு அசட்டுத் தைரியம் வேண்டும். அது இல்லாதவர்கள் என்னதான் தாங்கள் நல்லவர்கள் என்று பெயர் எடுத்தாலும் அதைக் கையாளும் வரையில்தான் அதிகாரம்.

Wednesday, February 1, 2017

பாப்லோ பிக்காசோ: விளங்கிக் கொள்ள முடியாத கலைஞன்


ஒவியங்களைப் புரிந்து கொள்வதற்கு அதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் அவசியப்படுகிறார்கள். நாம் சில ஓவியங்களை வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டே இருப்போம். ஒன்றும் விளங்காது. ஒருவர் அதன் அழகியல் தன்மையை விவரிக்கும் போது இதை ஏன் நாம் இது வரை பார்க்கத்தவறிவிட்டோம் என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்துவிடுவோம். ஓவியத்துக்கும் நமக்கும் இடையில் இருக்கும் அந்த நபர் நம் பார்வையை முற்றிலும் நம்முடையது அல்லாத ஒரு பார்வையாக மாற்றியமைக்கிறார். முன்பு இருந்த பார்வை அவர் காட்டும் அந்தத் தருணத்தில் இருப்பதில்லை. முன்பு பார்த்த பார்வையில் வெறுமனே காட்சி மாத்திரம் தான் இருக்கிறது அதில் அந்த ஓவியம் காட்டும் தரிசனம் முற்றிலுமாகக் காணாமல் போகிறது.

டான் குயிக்ஸாட்டும் வாசிப்பனுபவமும்: பகுத்தறிவின் கண்கள் திறக்கப்படும் தருணம்


சில புத்தகங்களை நாம் மாத்திரமே வாசிக்க வேண்டும் போல் இருக்கும். அவைகளை மற்றவர்கள் யாரேனும் வாசிக்க நேர்ந்தால் பொறாமைத் தீ அவர்கள் மீது பற்றி எரியும். சில புத்தகங்களை அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் வாசித்து விட முடியாது. அப்படிப்பட்ட புத்தகக்களை வேறொருவர் வாசிக்க நேர்ந்தால் அவர்மீது தோழமை உணர்வு அதிகமாகிவிடும். இவைகளுக்கும் மீறி சில புத்தகங்கள் உள்ளன. அவைகள் தனிப்பட்ட வாசிப்பனுபவத்திற்கோ பெருமிதத்தின் வாசிப்பனுபத்திற்கோ ஆன புத்தகங்கள் அல்ல. வாசித்து முடித்தவுடன் அதனை இந்த உலகமே வாசிக்க வேண்டும் என்ற ஒரு புனிதமான எண்ணம் நமக்குள் உருவாகி விடும். அதனை வாசிக்கும் படி இந்த முழு உலகத்திற்கும் பரிந்துரை செய்வோம்.

Monday, January 30, 2017

திருநீர்சாமி: உண்மையை உணர்த்தும் உரையாடல் களம்


இமையத்தின் கதைகள் இதுவரை அவைகளின் கதைகளுக்காகவும், கதை மாந்தர்களுக்காகவும்  சிறப்பைப் பெற்றிருந்தன. செடல், கலியம்மாள் போன்றவர்களை வாழும் மனிதர்களாகப் பார்க்கவேண்டியிருக்கிறது. அதே போன்று பெத்தவன், எங்கதெ போன்றவை யதார்த்ததின் வாழ்க்கையாக நம்மால் அறியப்படுகின்றன. இவைகள் மாத்திரமே கதைகளின் சிறப்பம்சங்களா? கதை மாந்தர்கள் கதையின் வாழும் யதார்த்ததிற்கு மிக அருகில் இருப்பவர்கள்.  இம்மாத உயிர்மையில் வெளியாகி இருக்கும் ”திருநீர்சாமி” கதை இமையத்தின் கதைசொல்லலின் வேறொரு பரிமாணத்தைச் சுட்டிக் காட்டுகிறது. கதைக்கு என்று மூன்று பிரதானக் கூறுகள் இருக்கின்றன எனக் கொள்ளலாம். கதைப் பாத்திரம், கதைக் கரு, மற்றும் உரையாடல். இவைகளில் முதல் இரண்டை இலக்கிய விமர்சனத்தில் அதிகம் வைத்து விவாதித்து விட முடியும். மூன்றாவதை அவ்வளவு எளிதில் இலக்கிய விமர்சனம் என்ற அளவுகோளில் வைத்து விவாதிக்க முடியாது. அது முற்றிலும் தத்துவம் சார்ந்த ஒன்று. உரையாடல் என்று வரும்போது அது தத்துவத்திற்கான ஒரு களம் அல்லது கருவி. சொல்லப்போனால் உடையாடலைக் கொண்டே கதையாடலைக் கூட சாத்தியப்படுத்திவிட முடியும். இமையம் தன்னுடைய பெரும்பாலான கதைகளைக் கதையாடல், அதாவது Narration, மூலம் அல்லாது உரையாடல் மூலமாகவே சாதித்து விடுவார். நாடகங்களின் சிறப்பியல்பு முழு நாடகத்தின் கதையும் கதை மாந்தர்களும் உரையாடல் என்ற ஒரே களத்தில் மாத்திரமே இயங்குவது. அந்தச் சாத்தியம் இமையத்தின் கதைகளில் உண்டு. கதையாடல் இன்றி உரையாடலே போதுமானது என இமையத்தை வாசிக்கும்போது தோன்றுகிறது. எனவே கதைமாந்தர்களைக் காட்டிலும், கதையாடலைக் காட்டிலும் உரையாடலே முதன்மையானது போன்றும் தோன்றுகிறது.  

Wednesday, January 11, 2017

அதிமேதாவி குஞ்சிதபாதம்

பண்டிகைகளும் அர்த்தமற்ற கொண்டாட்டங்களும்
குஞ்சிதபாதத்தைச் சந்தித்து பல நாட்கள் ஆகிவிட்டன. நட்பு முறிந்துவிடக்கூடாதே என்று இடைவிடாமல் நான் தான் அவனைச் சந்தித்து வருகிறேன். ஒரு நாள் கூட அவன் என்னை வந்து பார்த்ததே கிடையாது.  ஒரு போன் கூட செய்ததில்லை. நான் தான் வெட்கமின்றி அவனைத் தொடர்ந்து போய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். உன்னுடைய ஆத்மார்த்த நண்பன் யார் என்று கேட்டால் செல்லமாக ”குஞ்சிதம் தான் என் ஒரே நண்பன்” என்று பெருமிதப்பட்டுக் கொள்வேன். ஆனால் அப்படி ஒரு நினைப்புக் கூட அவனுக்குக் கிடையாது. அவனுக்கு இருக்கும் நட்பு வட்டாரத்தில் நான் பத்தோடு பதினொன்று. பெயரைக் குறிப்பிட்டுக் ”கட்டியங்காரனைப் பற்றி தெரியுமா” என்று கேட்டால் திருதிருவென்று முழிப்பான். சொல்லப்போனால் அவனுக்கு நண்பர்கள் என்ற வகையில் உயிருக்குயிரான நண்பர்கள் என்று செண்டிமெண்டெல்லாம் எதுவும் கிடையாது. அவன் பாட்டுக்கு அவன் உண்டு பல்கலைக்கழகம் உண்டு அவனுடைய விடுதி அறை உண்டு என்று வாழ்பவன். கற்கண்டைத் தேடி அலையும் எறும்புகளைப் போன்று அவனைத் தேடி எங்கிருந்து வந்துவிடுவார்களோ தெரியாது. எப்படி அவன் அநேக நண்பர்களைச் சம்பாத்தித்து வைத்திருக்கிறான் என்றெல்லாம் கூடத் தெரியாது. அவன் அந்த விடுதி அறைக்கு வந்துவிட்டால் ஒரு எறும்புக்கூட்டமே அவன் ரூமுக்கு அணிவகுத்துவிடும். அனைத்தும் அரைக்கிறுக்குப் பைத்தியங்கள். என்ன பெரிதாகப் பேசிவிடப் போகிறார்கள். புத்தகங்களைப் பற்றித்தான். வாழ்க்கையில் எவ்வளவு இருக்கிறது. சினிமா, கடற்கரை என்று அனுபவிக்க எவ்வளவோ இருக்கின்றன. அட, கடற்கரைக்குச் செல்வது என்றால் கூட வாசிக்கவும் விவாதிக்கவும் தான். முற்றும் துறந்த சாமியார் பயல்கள். ஆனால் குஞ்சிதத்தை மாத்திரம் அப்படித் தப்பாக எடைபோட்டுவிட முடியாது. “குஞ்சிதம் குஞ்சிதம்” என்று செல்லமாக பேரைப் பாதி குறைத்து எப்போதும் அவனைச் சுற்றியே ஒரு பெண் சுற்றிக் கொண்டிருப்பாள். அதைப் பற்றி நாம் பின்பு ஒருநாள் பேசுவோம். அவன் எதையும் தேடிச் செல்வதில்லை. அனைத்தும் அவனையே மையமிட்டுக் கொண்டிருக்கும். நட்பு, காதல், என எதையும் அவன் உழைத்துப் பெற்றது கிடையாது. அனைத்தும் அவனைத் தேடியே வந்துகொண்டிருந்தன. அறிவும் அப்படித்தான். நான் மாங்கு மாங்கு என புத்தகங்களைப் படித்தாலும் ஒன்றும் மண்டையில் ஒட்டுவது கிடையாது. அவனுக்கு மாத்திரம் எப்படி இதெல்லாம் வாய்க்கிறது என்பது எனக்கு ஒரே பொறாமையாக இருக்கும்.

Friday, January 6, 2017

”Publish or Perish”



”Publish or Perish” என்று சொல்வார்கள். ஆரம்ப காலத்தில் இதைக் கேட்கும் போது உள்ளூர நடுக்கம் ஏற்படும். படிப்பு பிழைப்பு எல்லாம் இலக்கியம். வாழவே முடியாதோ என்ற பயம் அது. எழுதுவது என்பது ஒரு அலாதியான அனுபவம் என்பதை கற்றுக் கொடுத்தவர் நண்பர் அபிலாஷ். அதனையே பதிப்பில் பார்க்கும் போது கிடைக்கிற மன நிறைவு அதை விட அதிகம். என்னாலும் எழுதமுடியும் என்ற நம்பிக்கையை நான் உணர்ந்தது நணபர் அபிலாஷின் நட்பின் சூழலில் மாத்திரமே. அவருடைய நாவல் ’ரசிகன்’ பற்றி பல நாட்கள் என்னால் எதனையும் பேச முடியாமல் இருந்து வந்தது. ஏதோ ஒரு மையப்புள்ளியை நோக்கி என்னுடைய மௌனம் நாவலில் பயணித்துக் கொண்டிருந்தது. சடார் என்று ஒரு நாள் அந்த மையப்புள்ளியின் இருப்பிடம் தென்பட்டது. இரவு ஒரு மணிக்குள் மதிப்புரையை எழுதி முடித்து விட்டேன். இப்போது ”புத்தகம் பேசுது” இதழில் நூல் மதிப்புரையை பதிப்பில் பார்ப்பது பூரண மகிழ்ச்சியைத் தருகிறது. Thanks to Abilash.


Thursday, January 5, 2017

அதிமேதாவி குஞ்சிதபாதம்



அகட விகடம் பத்திரிக்கையில் தனக்கு ஒரு பத்தியை ஆசிரியர்கள் ஒதுக்கியது தனது பூர்வ ஜென்மத்துப் பலன் என்று எழுத்தாளர் கட்டியங்காரன் தன்னைப் பற்றி சுமார் ஒரு மணி நேரத்திற்கு தம்பட்டம் அடித்துக் கொண்டார். எரிச்சல் தாங்க முடியவில்லை. பொதுவாக எழுத்தாளர்களின் படைப்பு என்னவோ மகா அற்புதம் ஆனால் அவர்களை நேரில் சந்தித்தால் தான் ஆத்திரம் பொத்துக் கொண்டு வருகிறது. பளார் என்று ஒரு அரை விடவேண்டும் போல் தோன்றும். தாங்கள் தான் இந்த பூமியில் வாழும் ஒரே ஜீவ ராசி என்றும் தாங்கள் மாத்திரம் தான் புதிதாக சுவாசிப்பது போலவும் வாழ்வது போலவும் மற்றவர்கள் வெறும் ஜடங்கள் போலவும் நினைத்துக் கொள்கிறார்கள். இருந்தாலும் எழுத்தாளர்களின் நட்பு முகவும் முக்கியம். அதனால் ஏதாவது நமக்கும் கொஞ்சம் அறிவு ஊற்றெடுக்கும். நம்ம ஊர் பேராசிரியர்களுக்கு தற்பெருமை படைப்பாளிகள் எவ்வளவோ மேல். சிறிதும் எதிர்ப்புக் காட்டாமல் மௌனமாக கட்டியங்காரன் பேசியதற்கு எல்லாம் மாடு போல் தலையாட்டினேன்.

Wednesday, January 4, 2017

அறிவுக் கொழுந்து குஞ்சிதபாதம்


நேற்று இரவு ஒரே மனச் சோர்வு. யாரிடமாவது கொட்டித் தீர்க்க வேண்டும். இல்லை என்றால் அதுவே விஷமாக மாறி என்னையே கொன்றுவிடும் போல் இருந்தது. தற்போது அனைவருக்கும் மன நோய் பிடித்திருப்பதால் யாரிடமும் போய் பேச்சுக் கொடுக்கவும் முடியாது. மீறி பேசச் சென்றால் உலகத்தில் உள்ள விஷமிக்க வைரஸ்களை விட நம்முடையவர்களின் மன நோய் வைரஸ் நம் மனதை எளிதில் பாத்தித்து விடும். மிகவும் ஆபத்தான தொற்று நோய் இது. இந்த நோய் தாக்கப்படாத ஒரே நபர் நம்முடைய குஞ்சிதபாதம் ஒருவர் தான். அவருடைய விடுதி அறையின் கதவு எப்போதும் திறந்தே இருக்கும். எப்போது வேண்டுமானாலும் கதவைத் தட்டலாம். வெறுப்பைக் காட்டமாட்டார்.  

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...