”ஈசனருள்”: தமிழ் நவீனத்தில் கதைசொல்லியின் பிறப்பிடம்
உயிர்மை நவம்பர் இதழில் வெளியான “ஈசனருள்” கதையை வாசித்தேன். பொதுவாக கதை படித்த உடன் என் போன்ற நபர்கள் கத ’சூப்பர்’ சார் என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுவோம். காரணம் கதைகள் அவ்வளவாக பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அதனால் கதையைப் பற்றி பேசுவதற்கு எதுவும் வார்த்தைகள் இருக்காது. ஆனால் சிறந்த கதைகளோ மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தி குறைந்தது சில நாட்களுக்காவது சிந்திக்க வைக்கும், அதைப் பற்றி பேசவும் வைக்கும். உங்களுடைய எங்கதெ அப்படிப்பட்ட பாதிப்பை உண்டாக்கி நீண்ட நாள் விவாதங்களை துறையில் நண்பர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. நான் இந்த கதையை பாராட்ட ’சூப்பர்’ என்று சொல்லி கதையை கொச்சைப் படுத்த விரும்பவில்லை.